ஜனா­தி­பதி நாளை பங்­க­ளாதேஷ் விஜயம்

Published By: Raam

12 Jul, 2017 | 01:09 PM
image

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு நாளை வியா­ழக்­கி­ழமை பங்­க­ளாதேஷ் செல்­கின்றார். இந்த விஜ­யத்தின் போது அந்­நாட்டு ஜனா­தி­பதி அப்துல் ஹமீட் மற்றும் பிர­தமர் ஷெய்க் ஹஷீனா உள்­ளிட்ட அரச தலை­வர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யாடவுள்ளார்.

பங்­க­ளாதேஷ் அர­சாங்­கத்தின் விஷேட அழைப்பின் பேரில் அங்கு செல்லும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான குழு­வினர் விவ­சாய துறைசார் விட­யங்­களில் கூடிய கவனம் செலுத்தி ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்ள உள்­ளனர். இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான காலநிலை மாற்­றங்கள் மற்றும் இயற்கை அனர்த்­தங்கள் பொது­வா­ன­தாக அமை­கின்ற நிலையில் விவ­சா­யத்தில் பங்­க­ளாதேஷ் தன்­னி­றை­வான நாடாக திகழ்­கின்­றது. 

குறிப்­பாக அரிசி உற்­பத்­தியில் பங்­க­ளாதேஷ் தன்­னி­றைவை அடைந்­துள்­ளது.  அந்த வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பங்­க­ளாதேஷ் விஜ­யத்தின் போது இரு­த­ரப்பு  விவ­சாய துறைசார் ஒத்­து­ழைப்­புகள் முக்­கிய இடம்­பி­டிக்கும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

அதேபோன்று நாட்டில் அண்­மையில் ஏற்­பட்ட அனர்த்­தங்­களின் கார­ண­மாக அரிசி தட்­டுப்­பாடு ஏற்­பட்­டது . இதனை ஈடு செய்ய அவ­ச­ர­மாக பங்­க­ளாதேஷ் 40 ஆயிரம் மெட்ரிக் டொன் அரி­சியை வழங்­கி­யி­ருந்­தது. 

எனவே அரிசி உற்­பத்­தியில் தன்­னி­றைவை எட்டும் நோக்கில் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது. அதன்­படி   பங்­க­ளாதேஷ் விஜயம் விவ­சாய துறைக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என கருதப்படுகின்றது.  ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் பங்களா தேஷ் மத்திய விவசாய ஆய்வு நிலையத்திற்கும் விஜயம் செய்ய உள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்து உணவு வழங்க அனுமதியுங்கள் -...

2025-03-23 20:01:41
news-image

பாராளுமன்றத்தால் தேசபந்துவை பதவி நீக்க முடியாது...

2025-03-23 19:46:55
news-image

ஏப்ரல் 8இல் அரச சொத்துக்களை மீட்பதற்கான...

2025-03-23 16:20:07
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டம்...

2025-03-23 18:17:22
news-image

லெபனான் ஐ.நா. இடைக்காலப் பணிக்கு செல்லும்...

2025-03-23 17:51:16
news-image

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பாதுகாப்பாக நடத்துவதற்கு உறுதிபூண்டது...

2025-03-23 17:46:04
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 துப்பாக்கிச்...

2025-03-23 17:31:39
news-image

புதையல் தோண்டிய மூவர் கைது

2025-03-23 17:03:16
news-image

மாத்தளை - இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

2025-03-23 16:49:06
news-image

நுவரெலியாவில் டிஜிட்டல் கட்டண முறைகள் தொடர்பான...

2025-03-23 16:44:38
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; சந்தேகநபர்கள்...

2025-03-23 17:00:56
news-image

தேர்தல் காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட...

2025-03-23 16:06:49