bestweb

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்ட காலமாக சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய கொல்களத்திற்கு சீல் வைப்பு  

16 Jun, 2025 | 09:33 AM
image

மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும்  மாடுகளை அறுக்கும் கொள்களமொன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமை காரணமாக  மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.  

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போதே குறித்த கொள்களத்திற்கு சீல் வைக்கப்பட்டது. 

மன்னார் பள்ளிமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த கொள்களமானது பல வருடங்களாக சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய  நிலையில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

குறிப்பாக மாடுகளை அறுக்கும் கொள்களமானது அசுத்தமாக காணப்பட்டமை, உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமை, விலங்கு கழிவுகள் சுற்றுப்பகுதிகளில் காணப்பட்டமை, கழிவு நீர் தேங்கி காணப்பட்டமை, அரச அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாமை போன்ற பல்வேறு குறைபாடுகளின் அடிப்படையில் குறித்த கொள்களத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதன்  காரணமாக மன்னார் நகரசபைக்கு பல இலட்சம் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும் மக்களின் சுகாதார வசதிகளை கருத்திற் கொண்டு நகரசபையும் குறித்த சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள்  மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தி...

2025-07-09 02:16:46
news-image

போராட்டத்தில் ஈடுபட்ட இரு விவசாயிகளை கைது...

2025-07-09 02:06:28
news-image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக...

2025-07-09 01:53:47
news-image

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது...

2025-07-09 01:50:22
news-image

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து...

2025-07-09 01:43:34
news-image

ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-07-09 02:19:37
news-image

நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன்...

2025-07-08 22:20:24
news-image

துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரை...

2025-07-08 22:22:17
news-image

அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-07-08 21:15:17
news-image

பொரளையில் துப்பாக்கிச் சூடு!

2025-07-08 22:09:50
news-image

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல்...

2025-07-08 21:30:26
news-image

அரசியல் தலையீட்டுடன் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படவில்லை...

2025-07-08 15:00:47