bestweb

“ இலங்கையின் மீட்பு பாதை - கடன் மற்றும் நிர்வாகம்” என்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ள கீதா கோபிநாத்

15 Jun, 2025 | 08:11 PM
image

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார். இவர்  சனிக்கிழமை (14) நாட்டை வந்தடைந்தார்.

கடந்த 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி நிர்வாக பணிப்பாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 'இலங்கையின் மீட்பு பாதை - கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தொனிப்பொருளில்  திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இலங்கை விஜயம் குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ' இலங்கை, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவிற்கான எனது பயணங்களைத் தொடங்க கொழும்புக்கு வந்துள்ளேன். பிராந்தியத்திற்கான பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மற்றும் சர்வதே நாணய நிதியத்தின் முயற்சிகளை எவ்வாறு ஆதரிக்க முடியும் என்பது குறித்து ஆராய்வதற்கு அதிகாரிகள், சிவில் சமூகம் மற்றும் வணிகத் தலைவர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

'இலங்கையின் மீட்புப் பாதை : கடன் மற்றும் நிர்வாகம்' என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டு மாநாட்டிற்காக இலங்கைக்கு விஜயம் செய்வதில் ஆர்வமாகவுள்ளேன். இந்த நிகழ்ச்சியின் மையப் புள்ளி, இலங்கையின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் வரவிருக்கும் சவால்களுக்கான அவற்றின் தாக்கங்கள் குறித்து கவனம் செலுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பைக் குறிக்கிறது.' எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-09 06:10:45
news-image

தவறு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தி...

2025-07-09 02:16:46
news-image

போராட்டத்தில் ஈடுபட்ட இரு விவசாயிகளை கைது...

2025-07-09 02:06:28
news-image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக...

2025-07-09 01:53:47
news-image

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது...

2025-07-09 01:50:22
news-image

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து...

2025-07-09 01:43:34
news-image

ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-07-09 02:19:37
news-image

நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன்...

2025-07-08 22:20:24
news-image

துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரை...

2025-07-08 22:22:17
news-image

அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-07-08 21:15:17
news-image

பொரளையில் துப்பாக்கிச் சூடு!

2025-07-08 22:09:50
news-image

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல்...

2025-07-08 21:30:26