bestweb

சஜித் - நாமல் இணைந்து ஆட்சியமைப்பதாகக் கூறினால் அது கொழும்பு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

15 Jun, 2025 | 08:09 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கியிருக்கின்றனர். அதற்கமைய இன்று நாம் கொழும்பில் ஆட்சியமைப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதனை விடுத்து சஜித், நாமல் இணைந்து ஆட்சியமைப்பதாகக் கூறினால் அது கொழும்பு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தம்புத்தேகம வைத்தியசாலை வளாகத்தில்  ஞாயிற்றுக்கிழமை (15)  ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கியிருக்கின்றனர். எமது குழுக்களையே நாம் தேர்தலில் களமிறக்கியிருந்தோம். எதிர்க்கட்சி என்ற ஒன்று போட்டியிடவில்லை. வெ வ்வேறு கொள்கைகள், வெ வ்வேறு வேலைத்திட்டங்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன என ஒவ்வொரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன.

அந்த வகையில் கொழும்பு மாநகரசபையில் ஆட்சிமைப்பதற்கான மக்கள் ஆணை எமக்கே கிடைத்திருக்கிறது. கொழும்பை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறது. எனவே கொழும்பு மாநகரசபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். எனவே சஜித், நாமல் போன்றோர் இணைந்து கொழும்பில் ஆட்சியமைப்பதாகக் கூறினால் அது கொழும்பு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

எனவே தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பளித்து அவர்கள் விலகிக் கொள்வதே சிறந்தது. அவ்வாறில்லை என்றாலும், நாமே ஆட்சியமைப்போம். நாம் யாருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம், எமக்கு ஆதரவளிப்பவர்கள் யார் என்பதை மேயர் தெரிவின் போது அறிந்து கொள்ள முடியும். எமக்கு 50 சதவீதம் இல்லாவிட்டாலும், பெரும்பான்மையைப் பெற்றுள்ளோம். அந்த வகையில் பார்த்தாலும் மக்கள் ஆணையை எமக்கே வழங்கியிருக்கின்றனர். நாம் கொழும்பில் ஆட்சியமைப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தி...

2025-07-09 02:16:46
news-image

போராட்டத்தில் ஈடுபட்ட இரு விவசாயிகளை கைது...

2025-07-09 02:06:28
news-image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக...

2025-07-09 01:53:47
news-image

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது...

2025-07-09 01:50:22
news-image

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து...

2025-07-09 01:43:34
news-image

ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-07-09 02:19:37
news-image

நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன்...

2025-07-08 22:20:24
news-image

துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரை...

2025-07-08 22:22:17
news-image

அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-07-08 21:15:17
news-image

பொரளையில் துப்பாக்கிச் சூடு!

2025-07-08 22:09:50
news-image

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல்...

2025-07-08 21:30:26
news-image

அரசியல் தலையீட்டுடன் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படவில்லை...

2025-07-08 15:00:47