ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டாவை - ஹோமாகம வீதியில், பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் கார் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து சனிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ஹிரிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிபர் ஒருவர் ஆவார்.
கொட்டாவையிலிருந்து ஹோமாகம நோக்கிச் சென்ற கார், பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் மீது மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த வயோதிபர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM