bestweb

குளியாப்பிட்டி, உடுபத்தாவ பிரதேச சபைகளை கைப்பற்றியது பொதுஜன பெரமுன

Published By: Digital Desk 2

13 Jun, 2025 | 07:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

குளியாப்பிட்டி மற்றும் உடுபத்தாவ பிரதேச சபைகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சிகளுடனான பொது இணக்கப்பாட்டுடன் பொதுஜன பெரமுன இந்த பிரதேச சபைகளில் ஆட்சி அமைத்துள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி  மற்றும் பிற எதிர்க்கட்சி கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்து  பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் மற்றும் ஆசனங்களுக்கு அமைய  தனித்த பெரும்பான்மை  பெற்றுக்கொள்ளாத உள்ளுராட்சி மன்ற அதிகார சபைகளில்  கொள்கை அடிப்படையில் ஆட்சியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டி உள்ளூராட்சிமன்ற  ஆணையாளiர்   தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற  பகிரங்க வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக  விஜேசிறி ஏக்கநாயக்கவின் பெயர்  பிரதேச சபைத் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டது.

இந்த முன்மொழிவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்கின.இதற்கமைய விஜேசிறி ஏக்கநாயக்க குளியாப்பிட்டி பிரதேச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் நேற்று  முன்தினம் உடுபத்தாவ  உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற பகிரங்க வாக்கெடுப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்  நிஹால் ஜெயசிங்க பெரும்பான்மை வாக்குகளுடன் உடுபத்தாவ பிரதேச சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தி...

2025-07-09 02:16:46
news-image

போராட்டத்தில் ஈடுபட்ட இரு விவசாயிகளை கைது...

2025-07-09 02:06:28
news-image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக...

2025-07-09 01:53:47
news-image

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது...

2025-07-09 01:50:22
news-image

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து...

2025-07-09 01:43:34
news-image

ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-07-09 02:19:37
news-image

நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன்...

2025-07-08 22:20:24
news-image

துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரை...

2025-07-08 22:22:17
news-image

அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-07-08 21:15:17
news-image

பொரளையில் துப்பாக்கிச் சூடு!

2025-07-08 22:09:50
news-image

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல்...

2025-07-08 21:30:26
news-image

அரசியல் தலையீட்டுடன் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படவில்லை...

2025-07-08 15:00:47