bestweb

சட்ட ரீதியிலான இணக்கப்பாட்டினால் நாணய நிதியத்தின் செயற்றிட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளது - ஹர்ஷன சூரியபெரும

13 Jun, 2025 | 07:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட சட்ட ரீதியிலான இணக்கப்பாட்டினால் ஒருசில நிபந்தனைகளை கடுமையாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு காணப்படுகிறது. செலவுகளுக்கு அமைவாகவே சேவைகளின் கட்டணங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை நாணய நிதியம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது என பதில் நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்றிட்டங்கள் சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார திட்டங்களை அடிக்கடி மாற்றியமைப்பது பிரச்சினைக்குரியதாக அமையும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட சட்ட ரீதியிலான இணக்கப்பாட்டினால் ஒருசில நிபந்தனைகளை கடுமையாக நிறைவேற்றவேண்டிய கடப்பாடு காணப்படுகிறது. ஆகவே சிறந்த பொருளாதார மீட்சிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நீட்டிக்கப்பட்ட செயற்றிட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படும்.

மின்கட்டணம் உட்பட அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் இதர சலுகைகளுக்கான செலவுகளுக்குரிய வகையில் அவற்றுக்கான கட்டணங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மின்கட்டணம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டது. தற்போது வருடாந்த கட்டண திருத்தத்துக்கு அமைய மின்கட்டணம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்துடன் தொடர்புடைய இதர சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தி...

2025-07-09 02:16:46
news-image

போராட்டத்தில் ஈடுபட்ட இரு விவசாயிகளை கைது...

2025-07-09 02:06:28
news-image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக...

2025-07-09 01:53:47
news-image

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது...

2025-07-09 01:50:22
news-image

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து...

2025-07-09 01:43:34
news-image

ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-07-09 02:19:37
news-image

நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன்...

2025-07-08 22:20:24
news-image

துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரை...

2025-07-08 22:22:17
news-image

அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-07-08 21:15:17
news-image

பொரளையில் துப்பாக்கிச் சூடு!

2025-07-08 22:09:50
news-image

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல்...

2025-07-08 21:30:26
news-image

அரசியல் தலையீட்டுடன் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்படவில்லை...

2025-07-08 15:00:47