(இராஜதுரை ஹஷான்)
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட சட்ட ரீதியிலான இணக்கப்பாட்டினால் ஒருசில நிபந்தனைகளை கடுமையாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு காணப்படுகிறது. செலவுகளுக்கு அமைவாகவே சேவைகளின் கட்டணங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை நாணய நிதியம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது என பதில் நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்றிட்டங்கள் சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதார திட்டங்களை அடிக்கடி மாற்றியமைப்பது பிரச்சினைக்குரியதாக அமையும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட சட்ட ரீதியிலான இணக்கப்பாட்டினால் ஒருசில நிபந்தனைகளை கடுமையாக நிறைவேற்றவேண்டிய கடப்பாடு காணப்படுகிறது. ஆகவே சிறந்த பொருளாதார மீட்சிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நீட்டிக்கப்பட்ட செயற்றிட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படும்.
மின்கட்டணம் உட்பட அரசாங்கத்தால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் இதர சலுகைகளுக்கான செலவுகளுக்குரிய வகையில் அவற்றுக்கான கட்டணங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை சர்வதேச நாணய நிதியம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மின்கட்டணம் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டது. தற்போது வருடாந்த கட்டண திருத்தத்துக்கு அமைய மின்கட்டணம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்துடன் தொடர்புடைய இதர சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM