மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.
இதனால் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளின் வான் வழித்தடங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகளின் போது விமான பயணத்துக்கான நேரம் அதிகரிக்க கூடும்.
லண்டனில் இருந்து கொழும்பை வந்தடைந்த UL - 504 விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக மாற்றுப்பாதையில் தோஹாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதேவேளை, கொழும்பிலிருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட UL - 501 விமானம் மாற்றுப்பாதையில் பயணிக்கின்றது.
மேலதிக தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் 1979 , 94 11 777 1979 அல்லது 94 74 444 1979 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM