புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

12 Jun, 2025 | 07:09 PM
image

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப் பகுதிகளில் யானை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன.

இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 9ஆம் திகதி இரவு, வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் இரண்டு பெண் யானைகள் வெளியேறின.

கிராமங்களுக்குள் சுற்றித் திரிந்த அவை நேற்று காலை மீண்டும் வனப்பகுதியை நோக்கி திரும்பிச் சென்றன. அப்போது, வெள்ளியங்கிரி அருகே உள்ள முள்ளங்காடு பகுதியில் வந்தபோது, அப்பகுதியில் இருந்த மின்வேலி அவற்றை வழி மறித்தது.

இதனால், அந்த மின்வேலியை தாண்டிச் செல்ல முடியாமல் யானைகள் சிறிது நேரம் தவித்தன.

அப்போது சமயோசிதமாக யோசித்த ஒரு பெண் யானை, மின்வேலியின் கம்பிக்கு அடியில் புகுந்து வெளியேற, உடன் வந்த குட்டியும் வெளியேறியது.

மற்றொரு யானையால் அந்த வழியாக வெளியேற முடியாததால், மின்வேலியின் கம்பியை தாண்டியபடி வெளியேறியது.

இந்த காட்சியை, அப்பகுதியில் இருந்தவர்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரேன் பெண்ணின் சாதனையை முறியடித்த இந்திய...

2026-08-11 11:58:56
news-image

2026 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த...

2026-08-11 10:05:57
news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01
news-image

புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டியை 'தேனிலவு...

2026-07-09 13:01:03
news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19