(Vijithaa)
காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 16 வயது சிறுமி கடந்த 7 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி மஹியங்கனை அளுத்ராம பகுதியை சேர்ந்த பதலயாய மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி என தெரிவிக்கப்படுகின்றது.
காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கடந்த 5 ஆம் திகதி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட தடுப்பூசியின் போது பல முறை அவரின் உடலில் பல கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவில் வழங்கப்பட்ட தடுப்பூசியின் பின்னர் அவரது உடல் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறியதாகவும் 7 ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
மஹியங்கனை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஏ எம் சேனாரத்ன பண்டார இக்குற்றச்சாட்டு தொடர்பில் தெரிவித்ததாவது,
இம் மரணம் தொடர்பாக எமது நீதிமன்ற வைத்திய அதிகாரியினால் மரணப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் மரணமடைந்த மாணவி நிமோனியாவினால் பீடிக்கப்பட்டு நுரையீரல் மற்றும் முக்கிய உறுப்புக்கள் பாதிப்படைந்தே மரணமடைந்துள்ளார் என உறுதிசெய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM