bestweb

முச்சக்கரவண்டியில் கசிப்பு கடத்திய சந்தேக நபர் கைது

11 Jun, 2025 | 02:52 PM
image

பொசன் பௌர்ணமி தினத்தன்று பல்வேறு பிரதேசங்களில் விற்பனை செய்வதற்காக முச்சக்கரவண்டியில் கசிப்பு கடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் சப்புகஸ்கந்த பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கம்பஹா - சப்புகஸ்கந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் ஜா - எல பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொசன் பௌர்ணமி தினத்தன்று மதுபானசாலைகள் மூடப்பட்டிருப்பதால் சப்புகஸ்கந்த மற்றும் களனி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக முச்சக்கரவண்டியில் கசிப்பு கடத்தியதாக சந்தேக நபர், பொலிஸாரிடம் தெரிவத்துள்ளார். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1,87,500 மில்லி லீற்றர் (250 போத்தல்கள் ) கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சப்புகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-14 06:09:04
news-image

20 கோடி ரூபா பெறுமதியான அதிநவீன...

2025-07-14 06:02:05
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடை குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-14 08:50:00
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28