பொசன் பௌர்ணமி தினத்தன்று பல்வேறு பிரதேசங்களில் விற்பனை செய்வதற்காக முச்சக்கரவண்டியில் கசிப்பு கடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் சப்புகஸ்கந்த பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கம்பஹா - சப்புகஸ்கந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் ஜா - எல பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொசன் பௌர்ணமி தினத்தன்று மதுபானசாலைகள் மூடப்பட்டிருப்பதால் சப்புகஸ்கந்த மற்றும் களனி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்காக முச்சக்கரவண்டியில் கசிப்பு கடத்தியதாக சந்தேக நபர், பொலிஸாரிடம் தெரிவத்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 1,87,500 மில்லி லீற்றர் (250 போத்தல்கள் ) கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சப்புகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM