தெரணியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹிடிகந்த சப்புமல்கந்தவத்த பகுதியில், நபரொருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் தெரணியகல பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் உயிரிழந்தவர் கலஹிடிகந்த, சப்புமல்கந்தவத்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.
உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் வசித்து வந்ததாகவும், அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவர் என்றும் அப்பெண் முந்தைய திருமண உறவினால் பெற்ற பிள்ளைகளுக்கும் குறித்த நபருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இடம்பெற்ற தாக்குதலின் விளைவாக அவர் காயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் எனவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சடலம் கரவனெல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேக நபரை கைது செய்ய தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM