தெரணியகல பகுதியில் நபரொருவர் தாக்கப்பட்டு கொலை

10 Jun, 2025 | 05:15 PM
image

தெரணியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹிடிகந்த சப்புமல்கந்தவத்த பகுதியில், நபரொருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் தெரணியகல பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தாக்குதலில் உயிரிழந்தவர் கலஹிடிகந்த, சப்புமல்கந்தவத்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் ஆவார்.

உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் வசித்து வந்ததாகவும், அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவர் என்றும் அப்பெண் முந்தைய திருமண உறவினால் பெற்ற பிள்ளைகளுக்கும் குறித்த நபருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இடம்பெற்ற தாக்குதலின் விளைவாக அவர் காயமடைந்து கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் எனவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சடலம் கரவனெல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபரை கைது செய்ய தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில்...

2025-06-16 09:09:09
news-image

07 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-16 09:12:36
news-image

இன்றைய வானிலை 

2025-06-16 06:07:20
news-image

“ இலங்கையின் மீட்பு பாதை -...

2025-06-15 20:11:07
news-image

சஜித் - நாமல் இணைந்து ஆட்சியமைப்பதாகக்...

2025-06-15 20:09:24
news-image

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன்? ; ...

2025-06-16 03:55:17
news-image

வவுனியா மாநகரசபையில் நாங்களே ஆட்சியமைப்போம் -...

2025-06-16 03:36:26
news-image

ஓட்டமாவடியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில்...

2025-06-16 03:37:24
news-image

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை இலங்கை...

2025-06-16 03:21:05
news-image

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது தெரிவு...

2025-06-16 02:57:36
news-image

கொழும்பில் ஆட்சியமைப்பது இலகுவானதல்ல ; இறுதிவரை...

2025-06-15 20:06:34
news-image

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க எந்தவொரு...

2025-06-15 18:33:56