மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான “பெருக்க மரம்”

09 Jun, 2025 | 02:07 PM
image

(எஸ்.ஆர்.லெம்பேட்)

மன்னார் பள்ளிமுனையில் உள்ள பெருக்க மரம் சுமார் 800 வருடங்கள் பழமை வாய்ந்தது. 10.50 மீற்றர் உயரமும் 21.10 மீற்றர் சுற்றளவும் கொண்ட இந்த மரம் அரேபிய வணிகர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது.

அரேபியர் காலத்துக்கு உரித்தானதாக மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை கிராமத்தின் பிரதான வீதியின் அருகில் அமைந்துள்ள பெருக்க மரம் தென்னிலங்கையில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மன்னாருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

 பயோபாப் (BAOBAB) என்பது இந்த மரத்தின் பெயர். இந்த இனப்பெருக்க மரம் தென்னாசியாவிலேயே மிகப்பெரிய சுற்றளவை உடையது. 

இது மிகவும் பிரமாண்டமானதாக மட்டுமன்றி அழகான தோற்றத்திலும் காணப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மன்னாருக்கு வருகைதந்து மறக்காமல் இந்த மரத்தை வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

2003இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பயோபாப் மரம் எனப்படும் பெருக்க மரங்களின் எண்ணிக்கையை நோக்குகையில், இலங்கையில்  சுமார் 40 மரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அவற்றில் 34 மரங்கள் மன்னார் பகுதியில் உள்ளன என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இம்மரத்தின் விட்டம் பெரிதாக காணப்படுவதால் இதனை பெருக்க மரம் என்கின்றோம். இதற்கு விசேடமாக, “இயற்கை தந்த நீர்க் கலசம்” என்றொரு பெயரும் உண்டு.

ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்னர் அராபிய வர்த்தகர்களால் இலங்கைக்கு இந்த மரம் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும்  நம்பப்படுகிறது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை இந்த மரம் அதிகமாக கவர்ந்துள்ள நிலையில், மன்னாருக்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மன்னார் பள்ளிமுனை கிராமத்துக்கு தவறாமல் செல்வதே, இந்த பருத்த பெருக்க மரத்தின் விசாலமான தோற்றத்தை பார்ப்பதற்கு என்றுதான் சொல்லவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

2025-06-12 19:09:30
news-image

மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான...

2025-06-09 14:07:39
news-image

கடலும் காடும் கலந்த “ஆழிவனம்” 

2025-06-09 14:10:39
news-image

ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்...

2025-06-07 12:57:45
news-image

29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்து...

2025-05-30 14:45:05
news-image

அமானுஷ்யங்கள் நிறைந்த ஜப்பானின் “தற்கொலை காடு”

2025-05-28 16:57:48
news-image

நுவரெலியாவில் இயற்கை அழகின் மையப்பகுதியாக திகழும்...

2025-05-27 18:37:56
news-image

பொலிஸ் அதிகாரியை தாக்கிய “குற்றவாளி” பூனை...

2025-05-24 18:09:10
news-image

ஒரே இடத்தில் மூன்று இயற்கை அற்புதங்கள்!...

2025-05-19 17:24:17
news-image

‘வலையில் கண்ட முகம்…’ யார் இந்த...

2025-05-16 16:58:29
news-image

`நாடாகவே' அங்கீகரிக்கப்படாத நாடுகள்

2025-05-16 13:34:10
news-image

தாஜ்மகாலை தன்னந்தனியாகச் சுற்றி பார்க்க முடியுமா?

2025-05-13 10:42:50