கடலும் காடும் கலந்த “ஆழிவனம்” 

09 Jun, 2025 | 02:10 PM
image

இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கரையொதுங்கிய பாரிய கப்பலின் பாகங்கள் கடற்பரப்பில் நினைவுத் தடங்களாகி, சுற்றுலா மையமாகக்  காட்சியளிக்கும் முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் “கப்பல் வீதி”... 

(பாலநாதன் சதீசன்)

யற்கை இறைவனின் இணையில்லா ஓவியம் என்பது போல இயற்கையின் கொடைகளால் பரந்து விரிந்த பசுந்தரை, பற்றைக் காடுகளுடன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கடற்கரையுடன் அமைவு பெற்றிருக்கும் ஆழிவனம் கடற்கரை முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்காலில்  அமைவு பெற்றிருப்பது  சிறப்பானதாகும்.

பரந்து விரிந்திருக்கும் மணல் தரைகளில் ஆங்காங்கே சிறு சிறு பனைமரக்கூடல்களும் சிறு சிறு பற்றைக்காடுகளும், உண்பதற்கு அரிதாக கிடைக்கும் நாவல், பனிச்சை, சூரைப்பழ மரங்கள் என இயற்கைச் சூழல் இட அமைவிலேயே ஆழிவனம் கடல் அமைந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால்  கிராமத்தில் இந்த ஆழிவனம் கடற்கரை சுற்றுலா மையம் அமைந்துள்ளது. 

இக்கடல் பரந்த  காடுகளுக்கு மத்தியில் காணப்படுவதால் “ஆழிவனம்” கடற்கரை என  அழைக்கின்றார்கள். அக்கடற்கரையினை தற்போது மக்கள் “கப்பல் வீதி கடல்” என்றும் அழைக்கின்றார்கள். ஏனெனில், 2006ஆம் ஆண்டு  இயந்திரக் கோளாறு காரணமாக ஜோர்தான் நாட்டுக்கு சொந்தமான பாரிய கப்பலொன்று  கரையொதுங்கியிருந்தது. பின்னர் அதன் அடிப்பாகங்கள் மட்டுமே இந்த கடல் பகுதியில் எஞ்சி, அதன் நினைவுத்தடங்களாக இருக்கின்றன. இதன் காரணமாக, பலர், இந்தப் பகுதியை “கப்பல் வீதி” என்றே கூறுகின்றார்கள்.

பார்ப்பவர்கள் மனதை தன் வசம் ஈர்க்கும் வகையில் ஆழிவனம்  கடல் தோற்றமளிக்கிறது. இந்த கடல் மிகவும் ஆழமானதாகவும் கடற்பரப்பில் அலைகளின் தாக்கம் குறைவானதாகவும் காணப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் சிறு வாடி அமைத்து, தத்தமது கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஆழிவனம் கடற்பகுதியில் உள்ள கப்பலின் அடியில் பறவைகள் அனைத்தும் சென்று, இளைப்பாறி, பின் பறந்து செல்லும் அழகோ தனி! 

கடலலைகள் கரைதழுவிச் செல்லும்போது அலையில் அடித்துவரும் சிறு நண்டுகள் வரையும் ஓவியமும், அலைகளோடு கரைவந்துசேரும் சிறு மட்டிகள் தம்மை  மண் போர்வையால் போர்த்திக்கொள்ளும் அழகும் பார்ப்பவர் மனதை வசீகரிக்கின்றன.

இந்த கடற்கரையில்  சிறுவர்கள் விளையாடக்கூடிய வகையில்  தூய்மையான  மணல் தரைகளும் இருக்கின்றன. அத்தோடு  இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவுகளை சுமக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு மிக அருகிலேயே இந்த கடற்கரை இருப்பதால், இது வரலாற்றுப் பதிவு மிகுந்த இடமாகவும் உள்ளது. 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் வகையில் காடு, மணல், கடல், கனி மரங்கள் என முற்றிலும் மாறுபட்ட, வனப்பு மிகுந்த இயற்கைச் சூழலைக் கொண்டு, தனி அழகுடன் காட்சியளிப்பதும் கூட முல்லை மண்ணுக்கு சிறப்புச் சேர்க்கிறது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39
news-image

வலியவனுடன் மோதும் எளியவன்: வைரலாகும் மான்குட்டி...

2026-01-11 14:18:36
news-image

1.5 தொன் அப்பிள் பழங்களில் கிறிஸ்மஸ்...

2025-12-25 13:00:17
news-image

மேத்யூ ஹைடனின் நகைச்சுவை சவால்

2025-12-06 21:48:31