இன்றைய திகதியில் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் நாளாந்தம் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது ஏழு அல்லது எட்டு கிலோமீற்றர் வரை நடப்பர். நாளடைவில் இந்த தூரம் இரண்டு கிலோமீற்றராக குறைந்து விடும். இன்னும் சிறிது நாட்களில் இவர்கள் நடப்பதற்கே சிரமப்படுவார்கள். இத்தகைய அறிகுறி எம்மில் சிலருக்கு ஏற்பட்டிருக்க கூடும். இதனை மருத்துவ மொழியில் லும்பர் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் என குறிப்பிடப்படும் கீழ்ப் பக்க முதுகு பகுதியில் நரம்பு அழுத்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என உணர்ந்து, அதற்கான சிகிச்சையை பெற வேண்டும் என வைத்திய நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
முதுகு வலி, குறிப்பாக கீழ் முதுகு பக்கத் வலி, இரண்டு கால்களிலும் பரவும் நிலை , கால் வலி, தசை பிடிப்பு, நடக்கும் போதோ நிற்கும் போதோ முன்னோக்கி நகரும் போதோ வலி அதிகரித்தல், கால்களில் உணர்வின்மை அதாவது மரத்துப்போதல் , பலவீனம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் இருக்கும் முதுகு தண்டுவட நரம்பியல் நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெறவேண்டும்.
முதுமையின் காரணமாக ஏற்படும் தேய்மானம் , முதுகெலும்பு பகுதியில் ஏற்படும் வீக்கம், இதனால் முதுகெலும்பு பகுதிகள் உள்ள குழாய் பகுதிகளின் அகலம் குறைகிறது. வேறு சிலருக்கு ஓஸ்டியோஓர்தரைடிஸ் எனும் தசை நார் தடிமனாகும் பாதிப்பு ஏற்படுதல், அதிர்ச்சி, விபத்து போன்ற காரணங்களாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
மேலே விவரிக்கப்பட்ட அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளை வைத்தியர்கள் எக்ஸ்ரே - எம் ஆர் ஐ - சிடி ஸ்கேன் - போன்ற பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர். இதனைத் தொடர்ந்து நரம்பியல் செயல்பாடு திறன் குறித்த பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்வார்.
பாதிப்பின் தன்மையை பொறுத்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் நிவாரணம் வழங்குவர் . இவை முழுமையான நிவாரணத்தை வழங்கவில்லை என்றால் கூடுதலான சில பரிசோதனைகளை மேற்கொண்டு, அப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் நரம்பு சுருக்கத்தை நவீன சத்திர சிகிச்சை மூலம், சீரமைத்து நிவாரணத்தை அளிப்பர். இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் - உணவு முறை மாற்றங்கள் - இயன்முறை சிகிச்சை - உடற்பயிற்சி- நடை பயிற்சி- ஆகியவற்றை தொடர்ந்தும் , உறுதியாகவும் பின்பற்றினால் இத்தகைய பாதிப்பிலிருந்து ஆயுள் முழுவதும் நிவாரணத்தை பெறலாம்.
வைத்தியர் விக்னேஷ்
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM