சத்தியபிரமாணம் செய்துக்கொண்ட இ.தொ.கா.வின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்

07 Jun, 2025 | 08:39 PM
image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் நிகழ்வு கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் சனிக்கிழமை (07) இடம்பெற்றது. 

நுவரெலியா மாவட்டத்தில் தெரிவாகிய 41 உறுப்பினர்கள் உட்பட 6 மாவட்டங்களில் தெரிவாகிய 62 உறுப்பினர்கள்  சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கும், பட்டியலூடாக தெரிவாகிய சபை உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வானது, பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன்தொண்டமான் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குரான்கெத்த ஆகிய பிரதேச சபைகளிலும், ஹட்டன்-டிக்கோயா, தலவாக்கலை-லிந்துலை, ஆகிய நகர சபைகளிலும், நுவரெலியா மாநகர சபையிலும் சேவல் சின்னத்தில்  போட்டியிட்டு 39 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.

மேலும், வலப்பனை பிரதேச சபையில் நாட்காளி சின்னத்தில் போட்டியிட்டு 2 உறுப்பினர்கள் அடங்கலாக மொத்தமாக 41 உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுக்கொண்டது.

பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்ல, ஹாலிஎல ஆகிய பிரதேச சபைகளில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 4 உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட அதேவேளை, ஹல்துமுள்ள, ஹப்புதலை, லுனுகலை ஆகிய பிரதேச சபைகளில் தொலைப்பேசி சின்னத்தில் போட்டியிட்டு 5 உறுப்பினர்கள் உள்ளடங்களாக 9 உறுப்பினர்களையும் மொத்தமாக பதுளை மாவட்டத்தில் பெற்றுக்கொண்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தை பொறுத்தவரையில் மாத்தளை, இரத்தோட்டை, அம்பன்கங்ககோரளை ஆகிய பிரதேச சபைகளிலும், மாத்தளை மாநகர சபையிலும் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு மொத்தமாக 6 உறுப்பினர்களை தன்வசப்படுத்திக்கொண்டுள்ளது.

மேலும் கண்டி மாவட்டத்தில் பன்வில, உடபலாத்த, பாத்தஹேவாஎட்ட ஆகிய பிரதேச சபைகளில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 4 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் தொலைப்பேசி சின்னத்தில் போட்டியிட்டு 1 உறுப்பினரையும், இரத்தினபுரி மாவட்டம் காவத்தை பிரதேச சபையில் 1 உறுப்பினர் உள்ளடங்களாக மொத்தமாக ஆறு மாவட்டங்களிலும் 62 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ், அனுசியா சிவராஜா, பிரதி தவிசாளர் ராஜதுரை மற்றும் கட்சியில் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளடங்களாக பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

''முழு நாடுமே ஒன்றாக'' என்னும் நடவடிக்கைகமைய...

2026-07-21 16:16:18
news-image

தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் பல இலட்சம்...

2026-07-21 16:12:20
news-image

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

2026-07-21 16:13:51
news-image

ஹவாய் 'ரிம்பேக்' சர்வதேச கடற்படைப் பயிற்சியில்...

2026-07-21 15:53:28
news-image

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல்...

2026-07-21 15:47:00
news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 14:46:43
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22