bestweb

பாணந்துறை துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபரை கைதுசெய்ய பொதுமக்களிடம் உதவி கோரல்

06 Jun, 2025 | 05:12 PM
image

களுத்துறையில் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேகட பிரதேசத்தில் மே மாதம் 29 ஆம் திகதி காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்வதற்கு  பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

பாணந்துறை, வேகட பிரதேசத்திற்கு மே மாதம் 29 ஆம் திகதி காலை மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்த பணியாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சந்தேக நபர் அடையாளங்காணப்பட்டுள்ளார். 

இந்த புகைப்படங்களில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் 075 - 8900009, 071 - 7409070 அல்லது 038 – 2241467 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபரின் விபரங்கள் பின்வருமாறு ; 

  • பெயர் - பல்லேவெல கொடகந்தகே ரஜீவ சுராஜ் சாமர 
  • முகவரி - இலக்கம் 11/ பீ, ஹொரணை வீதி, அலுபோமுல்ல, பாணந்துறை 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07
news-image

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைமை பதவி...

2025-07-10 21:07:09
news-image

அரசாங்கம் பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பதால் ஆபத்து...

2025-07-10 20:34:08
news-image

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை...

2025-07-10 17:24:20
news-image

மீண்டும் டிரம்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் :...

2025-07-10 20:18:11
news-image

அதிகளவில் புதிய முதலீட்டாளர்களை கவர வேண்டியது ...

2025-07-10 20:33:07
news-image

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...

2025-07-10 20:41:50
news-image

எஹெலியகொடையில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-07-10 17:27:42
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2025-07-10 20:09:52