வெளிநாட்டில் உள்ள பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான "குடு சலிந்து" என அழைக்கப்படும் சலிது மல்ஷிக குணரத்ன என்பவரின் சகா போதைப்பொருளுடன் களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை - ரஜவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதசெய்யப்பட்டவர் பாணந்துறை - அருக்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 513 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி 50 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM