தேசிய சுற்றாடல் வாரத்தின் இறுதி நாளான இன்று (5) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் விசேட நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
தேசியக்கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தலுடன் ஆரம்பமான இன்றைய நிகழ்வில் மாவட்ட செயலாளரின் தலைமையுரையும் அதனைத் தொடர்ந்து அனைத்து அலுவலர்களும் சுற்றுச்சூழல் உறுதிமொழியெடுத்தல் (Environmental Pledge) நிகழ்வும் நடைபெற்றது.
பின்னர், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர் மத்தியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனின் பேச்சு மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர் மத்தியில் நடைபெற்ற சுவரொட்டி ஓவியப் போட்டியில் பங்குபற்றி திறமையை வெளிக்காட்டிய மாணவர்களது சுவரொட்டி ஓவியங்களின் கண்காட்சியும் நடத்தப்பட்டது.
இறுதியாக மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) எஸ்.குணபாலன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) ஜெயகாந், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் சற்குணேஸ்வரன், பிரதம கணக்காளர் ரஞ்சித்குமார், திட்டப் பணிப்பாளர் ஜெயரஞ்சினி மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM