bestweb

கழுத்து நெரித்து பெண் கொலை ; சந்தேக நபர் சிக்கியது எப்படி?

05 Jun, 2025 | 03:47 PM
image

வத்தளை - மஹாபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரகஹபொக்குன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கழுத்து நெரித்து பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மஹபாகே பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (05) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று புதன்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

மஹாபாகே, கெரகஹபொக்குன பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 40 வயதுடைய சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரனின் மகன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர், கொலை செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பணத்தை கடனாக பெற்றுள்ள நிலையில்,  கடனை திருப்பி தராததால் சந்தேக நபருக்கும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த சந்தேக நபர், குறித்த பெண்ணை கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடி அதனை அடகு வைத்து பணத்தை பெற்று, புத்தளம் பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

தங்க நகைகளை திருடி  அடகு வைத்து பெற்ற பணத்தை தனது மனைவியின் வீட்டில் மறைத்து வைத்துள்ளதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரின் மனைவியின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவிடம் வரி திருத்த யோசனைகளை முன்வைப்போம்...

2025-07-10 20:13:29
news-image

அரசாங்கத்துக்கு எதிராக பேசுபவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

2025-07-10 20:11:41
news-image

கடல்மார்க்கமாக இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் :...

2025-07-10 22:00:30
news-image

திருத்தப்பட்ட மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக...

2025-07-10 20:36:07
news-image

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைமை பதவி...

2025-07-10 21:07:09
news-image

அரசாங்கம் பாடப்புத்தக நிபுணர்களை நம்பியிருப்பதால் ஆபத்து...

2025-07-10 20:34:08
news-image

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை...

2025-07-10 17:24:20
news-image

மீண்டும் டிரம்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள் :...

2025-07-10 20:18:11
news-image

அதிகளவில் புதிய முதலீட்டாளர்களை கவர வேண்டியது ...

2025-07-10 20:33:07
news-image

கேட்ஸ் நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில்...

2025-07-10 20:41:50
news-image

எஹெலியகொடையில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-07-10 17:27:42
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2025-07-10 20:09:52