பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 27 மாணிக்கக் கற்கள் மற்றும் தங்க மோதிரத்தை திருடியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பாணந்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பாணந்துறை வடக்கு பிரதேசத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனிப்பட்ட தேவைக்காக வெளியே சென்றுள்ளார்.
இதன்போது சந்தேக நபர்கள் மூவரும் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த பைக்குள் இருந்து 27 மாணிக்கக் கற்கள் மற்றும் தங்க மோதிரத்தை திருடிச் சென்றுள்ளனர்.
பின்னர் வர்த்தகர் இது தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் மூவரும் பாணந்துறை வடக்கு , சாவியா வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, திருடப்பட்ட மாணிக்கக் கற்கள் மற்றும் தங்க மோதிரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM