வத்தளை - மஹாபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெரகஹபொக்குன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கழுத்து நெரித்து பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று புதன்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.
மஹாபாகே, கெரகஹபொக்குன பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து வீட்டிலிருந்த தங்க நகைகளும் காணாமல்போயுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையாளி வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ராகமை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளி தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM