தீர்த்த யாத்திரையின் தெய்வீக இலக்கு இரத்தினேஸ்வரம் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேகம்

04 Jun, 2025 | 05:21 PM
image

இலங்கையின் அற்புதமான நகரான இரத்தினபுரியில் அமைந்துள்ள ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பிகா சமேத இரத்தின சபேஸ்வரர்  ஆலயமானது, நூற்றாண்டுகளாக இறைவன் சிவபெருமான் மீது பக்தி செலுத்தும் இடமாக விளங்குகிறது.

இந்த ஆலயம், பழமை, பண்பாடு மற்றும் பக்தி ஆகிய மூன்றையும் ஒன்றிணைக்கும் ஆன்மிக மையமாக உள்ளதோடு விபீஷணன் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயமாகவும் போற்றப்படுகின்றது.

தென்னிந்திய ஸ்தபதியர் பாரம்பரியத்துடன் கூடிய வடிவமைப்பில் நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தில் இரத்தினேஸ்வரர் (ஸ்ரீ பரமேஸ்வரன்) மூலவராகவும்  திரிபுரசுந்தரி அம்பாள் உபதேவியாகவும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை  மற்றும் 7 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை  எண்ணெய் காப்பு இடம்பெறவுள்ளதோடு, இரத்தின சபேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை 7.30 மணி முதல் 8.26 மணி வரை  இடம்பெறவுள்ளது.

இரத்தினேஸ்வரம் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  இரத்தின பூமிக்கான புனித தீர்த்த யாத்திரையானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள், இலங்கையிலுள்ள பஞ்ச ஈஸ்வரங்களில் இருந்து பெறப்பட்ட தீர்த்தங்கள் மற்றும்  கலசங்கள் ஆகியன விசேட பூஜை வழிபாடுகளுடன் தலைநகர் கொழும்பிலுள்ள பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்திலிருந்து  ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

இதில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்  ஆகியோரும் பக்த அடியார்களும் இந்த தீர்த்த யாத்திரைக்கான பூஜை வழிபாடுகளில் கலந்துக்கொண்டனர்.

குறிப்பாக, கொழும்பு 06 - மயூரபதி அம்மன் கோயில்  ,கொழும்பு 11 - ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் , கொழும்பு 11 முத்துவிநாயகர் கோயில்,  கொழும்பு 11- புதிய கதிரேசன் கோயில் , கொழும்பு 11 - பழைய கதிரேசன் கோயில் , கொழும்பு 11- சின்ன காளியம்மன் கோயில் , கொழும்பு 11- பெரிய காளியம்மன் கோயில் , கொழும்பு 11- சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி கோயில்,  அவிசாவளை - ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் , - எஹலியகொட - ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில்  , இரத்தினபுரி - ஸ்ரீ மகா காளியம்மன் கோயில், இரத்தினபுரி - ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் , இரத்தினபுரி - ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் போன்ற புனித ஸ்தலங்களின் ஊடாக புனித தீர்த்தயாத்திரை ஊர்வலமாக சென்று 5 ஆம் திகதி வியாழக்கிழமை இரத்தினபுரி நகர்,ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்பிகா  சமேத இரத்தின சபேஸ்வரர் திருகோயிலை சென்றடையவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29
news-image

இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிலையான சமாதானத்தை...

2025-06-15 20:08:40
news-image

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு

2025-06-15 17:43:24
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய...

2025-06-14 11:28:41
news-image

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில்...

2025-06-13 20:55:14
news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43
news-image

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் பொசன் போயாவை...

2025-06-11 19:39:19
news-image

நேஷன்ஸ் டிரஸ்ட் வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப்...

2025-06-10 14:53:12
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2025-06-09 17:07:35
news-image

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ வற்றாப்பளை...

2025-06-09 15:28:38