"எதற்கும் தயாராக இருங்கள்" - கட்சி உறுப்பினர்களை தயார்ப்படுத்திய டக்ளஸ் தேவானந்தா!

04 Jun, 2025 | 02:43 PM
image

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கொள்கையே சரியானது என்பதையும், எமது அரசியல் தீர்விற்கான அணுகுமுறையே நடைமுறைச் சாத்தியமானது என்பதையும் காலம் வெளிப்படுத்தி வருவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்ட  உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உறுதியுரை எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது குறித்த விடயத்தினை தெரிவித்தார்.

அதாவது, "ஈ.பி.டி பி. கட்சியின் கொள்கையும், கட்சியினால் வலியுறுத்தப்படுகின்ற 13 ஆம் திருத்தச் சட்டத்தினை ஆரம்பமாகக் கொண்ட அரசியல் தீர்வு வழிமுறையுமே சாத்தியமானது என்பதை அண்மைய அரசியல் நிலைவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

13 ஆம் திருத்தச் சட்டத்தினை தொட்டும் பார்க்க மாட்டோம் என்றெல்லாம் முழங்கியவர்கள், எதனை மறுத்தார்களோ அவற்றை ஏற்றுக்கொள்வதாக  ஒப்பந்தம் செய்கின்றார்கள்.

எனவே எமது நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் நம்பிக்கையுடன் ஆழமாக கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் எடுத்துச் செல்ல வேண்டும். 

அதேபோன்று, எமது கட்சிக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களும் அடிப்படைகள் அற்றவை - அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

தற்போதுகூட, யாழ்ப்பாணத்தினை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விரைவாக கைது செய்யப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.

ஆளுந்தரப்பினர் நினைத்தால் விரும்பியவாறு விசாரணைகளை மேற்கொள்ளலாம், எமக்கு எதிராகவும் அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். 

எமக்கு எதிராக அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின், அவை அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்குமே தவிர, உண்மையாக இருக்காது.

எவ்வாறாயினும், அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கு நாம் தயாரான மனோநிலையுடன், எமது அரசியல் நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43
news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக்...

2025-11-07 17:08:18
news-image

கிரான், பென்டுகால் பாலங்கள் அபிவிருத்திக்கு நிதி...

2025-11-07 17:09:47
news-image

இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் -...

2025-11-07 17:02:58
news-image

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான...

2025-11-07 16:56:46