(எம்.மனோசித்ரா)
அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்ல்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழு மற்றும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) ஆகியோருக்கிடையில் செவ்வாய்கிழமை (3) இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்சும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை வலுப்படுத்துதல் தொடர்பில் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. தற்போதுள்ள கூட்டாண்மைகளை விரிவுபடுத்துதல், பிராந்திய மற்றும் கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் கள விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டது.
மேலும், இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இலங்கையின் மூலோபாய பங்கை அமைச்சர் மார்ல்ஸ் பாராட்டியதுடன், இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு குறிப்பாக கடல்சார் கள விழிப்புணர்வை மேம்படுத்துவதில் அவுஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த மற்றும் சுமுகமான பாதுகாப்பு உறவுகளை பிரதி அமைச்சர் ஜயசேகர எடுத்துக்காட்டியதுடன் நிலையான ஈடுபாடு மற்றும் பரஸ்பர ஆதரவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். மேலும், 2022 முதல் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படைக்கு பல மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருள் மானியம் உட்பட அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் விமானப்படை மற்றும் கடற்படைக்கு அதிநவீன இயந்திரங்களை வழங்கியமைக்கு பிரதி அமைச்சர் ஜயசேகர நன்றி தெரிவித்தார், இவை இச்சேவைகளின் கண்காணிப்பு திறன்களை கணிசமாக அதிகரிக்கும் . இந்து - பசுபிக் பிராந்தியத்தில் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய உரையாடல் மூலம் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் இரு நாடுகளின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த விஜயம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM