தேசிய ஊடகக் கொள்கையால் கருத்து சுதந்திரம் முடக்கப்பட மாட்டாது - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

03 Jun, 2025 | 05:03 PM
image

(எம்.மனோசித்ரா)

தேசிய ஊடகக் கொள்கையை தயாரிப்பது தொடர்பில் ஊடகத்துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கருத்து மற்றும் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுமே தவிர, முடக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய ஊடகக் கொள்கையொன்றை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். மாறாக எமது அரசாங்கம் ஆட்சியேற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்டதல்ல. இது தொடர்பில் கடந்த அரசாங்கத்தால் ஊடகத்துறைசார் நிபுணர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியையே நாம் முன்னெடுத்துச் செல்கின்றோம். இது தொடர்பில் ஊடகத்துறையினருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த கலந்துரையாடல்களின் போது தேசிய ஊடகக் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊடகத்துறையினரின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த கொள்கை தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். இது தேசிய ஊடகக் கொள்கை மாத்திரமே. மாறாக சட்டம் அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் கருத்து மற்றும் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுமே தவிர, முடக்கப்பட மாட்டாது. ஊடகங்கள் விரும்பினால் மாத்திரமே இது நடைமுறைப்படுத்தப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'முழு நாடும் ஒன்றாக' தேசிய திட்டத்தின்...

2026-07-18 18:11:25
news-image

அடுத்த வாரம் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை:...

2026-07-18 15:53:51
news-image

இராணுவத்தினரால் பறிக்கப்பட்ட மக்களின் காணி நிலங்களை...

2026-07-18 17:50:29
news-image

ஒட்டுசுட்டான் - தண்டுவான் பகுதியில் வீடுத்திட்டத்திற்கு...

2026-07-18 18:08:56
news-image

கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப்...

2026-07-18 17:00:56
news-image

சி.டி. விக்கிரமரத்ன மரணம் : 10-க்கும்...

2026-07-18 16:38:27
news-image

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 25ஆவது...

2026-07-18 15:53:31
news-image

நாட்டில் தீவிரமடையும் டெங்கு : கடந்த...

2026-07-18 15:27:10
news-image

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகலவின்...

2026-07-18 15:20:54
news-image

நுளம்பு பெருக வழிவகுக்கும் சூழலை வைத்திருப்போர்...

2026-07-18 15:08:08
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொக்கெய்னுடன் மலேசிய...

2026-07-18 14:53:23
news-image

சர்ச்சைக்குரிய சம்பவங்களின் சாட்சியாளர்கள் மர்மமான முறையில்...

2026-07-18 14:41:15