23 பாடசாலைகளையே தேசிய பாடசாலைகளாக கடந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது - கல்வி அமைச்சர் ஹரிணி

03 Jun, 2025 | 05:00 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

கடந்த அரசாங்கத்தினால் ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தில் 23 பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறன. ஏனைய பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு அதுதொடர்பில் மீளாாய்வு செய்தே நடவடிக்கை எடுக்க வேண்டி இருகிறது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை  (03) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ரோஹித்த எம்.பி தனது  கேள்வியின்போது, 

கடந்த அரசாங்க காலத்தில் மாகாணசபைக்கு கீழ் இருந்த ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றி, அந்த பாடசாலைகளின் பெயர் பலகையையும் தேசிய பாடசாலையாக மாற்றியமைத்து, அந்த பாடசாலைகளில் இருக்கும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவித்து, அதுதொடர்பான நிகழ்வும் நடத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் அந்த பாடசாலைகளில், அதாவது, வலயத்துக்கு ஒரு தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கிறது.

அதனால் தேசிய பாடசாலைகளாக தெரிவுசெய்யப்பட்ட ஆயிரம் பாடசாலைகள் தற்போதும் தேசியப்பாடசாலைகளாக செயற்படுத்தப்படுகிறதா? அல்லது அந்த பாடசாலைகளை மீண்டும் மாகாணசபைக்கு கீழ் கொண்டுவரப்படுமா என கேட்கிறேன். 

ஏனெனில் குறித்த ஆயிரம் பாடசாாலை திட்டத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கும் பாடசாலை அதிபர்களுக்கு அண்மையில் அரசாங்கத்தினால் சுற்றுநிருபம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

அதில் குறித்த பாடசாலைகளை தேசிய பாடசாலையாக எழுத்து மூலமான நடவடிக்கைகளில் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் அதற்கு பொறுப்பு கூறவேண்டி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில்  உங்களின் கருத்து என்ன?

பிரதமர் தொடர்ந்து  பதிலளிக்கையில், கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீண்டும்  மாகாணசபைக்கு கீழ் கொண்டுவரும் எண்ணம் இல்லை. 

என்றாலும் தேசிய பாடசாலையாக பெயரிடப்பட்டிருக்கும் பாடசாலைகள், பெயர்  பலகையில் மாத்திரமே தேசிய பாடசாலையாக இருந்ததே தவிர தேசிய பாடசாலையாக முன்னேற்ற எந்த  வேலைத்திட்டமும் இருந்ததில்லை. 

அந்த பாடசாலைகளை தெரிவு செய்து தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டும் இருக்கிறது.

தற்போது  தேசிய பாடசாலைகளாக 23 பாடசாலைகளே பெயரிடப்பட்டிருக்கிறது. அந்த 23 பாடசாலைகளை மாத்திரமே தேசிய பாடசாலைகளாக நாங்கள் ஏற்றுக்காெள்கிறோம். 

பெயரளவில் தேசிய பாடசாலையாக கொண்டுசெல்ல நாங்கள் தயாரில்லை. அந்த பாடசாலைகளை மாகாணசபையால் நல்லமுறையில் நிர்வகித்து வருவதாக இருந்தால், அதனை அவர்கள் முன்னெடுத்துச்செல்வதில் பிரச்சினை இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். புங்குடுதீவு கடலில் காணாமல் போன...

2026-06-07 14:16:04
news-image

​கல்லடி வேலூரில் திடீர் தீ விபத்து...

2026-06-07 14:09:56
news-image

சலேவுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு...

2026-06-07 13:24:34
news-image

சலே சாகும் வரையிலான போராட்டத்தில் உறுதியாக...

2026-06-07 13:16:33
news-image

கண்டியில் புதிய அரசியல் கூட்டணி கூட்டம்:...

2026-06-07 13:06:09
news-image

யால பயிர்ச்செய்கைக்குப் போதிய நீர் இருப்பு:...

2026-06-07 13:03:16
news-image

விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற கார்...

2026-06-07 12:55:49
news-image

விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக நீர்கொழும்பில் தீப்பந்தம்...

2026-06-07 12:43:47
news-image

13 இலட்சம் இலங்கை மக்களுக்கு உணவு...

2026-06-07 12:35:42
news-image

நாமல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்...

2026-06-07 12:25:07
news-image

மஹர நகரில் மின்சார உபகரண விற்பனை...

2026-06-07 12:18:59
news-image

ஜீவந்த பீரிஸின் கருத்துக்களை பொருட்படுத்தத் தேவையில்லை...

2026-06-07 12:21:20