மருந்து தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொவிட் அதிகரிப்பு ; நிலைமையை சமாளிக்க அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை - சஜித்

02 Jun, 2025 | 06:04 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கிடையில், கொவிட் புதிய திரிபும் பரவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிப்பதற்கு அரசாங்கத்திடம் எந்த முன்னாயத்த திட்டங்களும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டுள்ளார்.

விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு விசனம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

தற்போது நாட்டில் பல்வேறு மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவில் 180 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. வைத்தியசாலை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இவற்றில், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், வலி நிவாரணிகள், இன்சுலின், இதய நோய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் உள்ளடங்குகின்றன. இது தொடர்பில் நாம் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய போதிலும், அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இந்த பிரச்சினைக்கான தீர்வினையும் அரசாங்கம் முன்வைக்கவில்லை.

எல்.பி. 8.1 எனப்படும் கொவிட் மாதிரிகளின் துணை மாறுபாடு தற்போது சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் ஹொங்கொங்கில் பரவி வருகின்றது. இந்த துணை வகை மாறுபாடுகள் குறித்து நமது நாட்டில் எந்த வித பரிசோதனைகளும் நடைபெறுவதாக காண முடியவில்லை. இந்த துணை மாறுபாடு திரிபுகள் தொடர்பாக எமது நாட்டிலும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மருத்துவமனைகளில் இதனுடன் தொடர்புடைய அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். இந்நிலைமையில் தற்போது சின்னம்மை நோயும் அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு ஆகக் குறைந்தது 6 வாரங்களாவது தொடர்ச்சியாக சிகிச்சையளிக்க வேண்டும். இதனைக் கட்டுப்படுத்துவதற்கும் முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்கு அதிவேக வீதியில் விபத்து ;...

2025-12-16 12:12:28
news-image

நூற்றாண்டை கடக்கும் இலங்கை வானொலி!

2025-12-16 12:01:45
news-image

நேற்றைய தினத்தில் மாத்திரம் வாகன விபத்துக்களில்...

2025-12-16 10:51:36
news-image

கம்பளை அம்புலுவா உயிரியல் பல்வகைமை வலயத்தின்...

2025-12-16 11:49:58
news-image

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

2025-12-16 11:22:54
news-image

மண்சரிவால் சேதமடைந்த வீடுகளில் இருந்து மீட்கப்பட்ட...

2025-12-16 11:49:18
news-image

மூங்கிலாறில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை: கணவன்–மனைவி...

2025-12-16 11:46:36
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிடியாணை

2025-12-16 12:10:30
news-image

கம்போடியா - தாய்லாந்து யுத்தம் நிறுத்தக்...

2025-12-16 10:33:26
news-image

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப்...

2025-12-16 10:34:43
news-image

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட்...

2025-12-16 10:27:32
news-image

பண்டிகை காலத்தில் வழிபாட்டுத் தலங்களில் விசேட...

2025-12-16 10:19:20