இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் நாளாந்த வாழ்வு என்பது கடினமாகவே இருக்கிறது. காலையில் கண்விழித்ததும் இறை நாமத்தை உச்சரிக்காமல் பொழுதை கடக்க முடிவதில்லை.
எம்மில் பலரும் அவர்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தின் நாமத்தினை உச்சரித்தாலும் எமக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதியிலிருந்து நிவாரணம் மட்டும் தான் கிடைக்கிறது.
முழுதான தீர்வு என்பது பலருக்கும் கிடைப்பதில்லை. இந்தத் தருணத்தில் இவர்கள் அனைவரும் தங்களின் ஜென்ம ராசியை உணர்ந்து கொண்டு சிவபெருமானின் குறிப்பிட்ட மந்திரத்தை... நாளாந்தம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உச்சரித்தால்... சிவபெருமானின் பரிபூரண ஆசி கிடைக்கும் என எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து எந்த ராசிக்காரர்கள் எம்மாதிரியான சிவ மந்திரத்தை நாளாந்தம் உச்சரிக்க வேண்டும் என்பது பற்றிய பட்டியலை காண்போம்.
மேஷம் - தனுசு- சிம்மம் ... 'ஓம் நமச்சிவாய
ரிஷபம் - மகரம் - கன்னி - 'சிவாய நமஹ'.
மிதுனம் -துலாம் - கும்பம் ..'ஓம் சர்வேஸ்வயாய நமஹ'.
கடகம் - விருச்சிகம் - மீனம் ..'ஓம் சந்திரமௌலீசாய நமஹ''.
இந்த ராசிக்காரர்கள் மேலே குறிப்பிடப்பட்ட இந்த சிவ மந்திரத்தை நாளாந்தம் காலையில் எழுந்து நீராடி இறைவனை வணங்கும் தருணத்தில் 108 முறை உச்சரிக்க வேண்டும்.
குறிப்பாக பிரதோஷம், திங்கட்கிழமை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இந்த மந்திரங்களை சொல்லத் தொடங்கி.. தொடர்ச்சியாக உச்சரித்து வந்தால் இந்த மந்திரத்தின் எண்ணிக்கை லட்சத்தை கடக்கும் போது உங்களுக்கு சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM