bestweb

லெவலென் ஹெரிமிடேச் பிரிவில் மண்சரிவு அபாயத்தில் உள்ள 30 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணித்து கொடுக்க நடவடிக்கை ; கலாநிதி பி. பி சிவப்பிரகாசம்

02 Jun, 2025 | 12:44 PM
image

நுவரெலியா மாவட்ட லெவலென் தொட்டத்தின் ஹெரிமிடேச் பிரிவில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேல்  மண்சரிவு அபாய எச்சரிக்கைக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சரின்  பிரத்தியேக செயலாளரும் ஆலோசகரும் தேசிய மக்கள் சக்தி உயர்பீட செயற்குழு உறுப்பினருமான கலாநிதி  பி. பி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார். 

லெவலென் தொட்டத்தின் ஹெரிமிடேச் பிரிவில் உள்ள  பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஏற்பாட்டில்  நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

கண்டி மாவட்டத்தில் மண் சரிவு அபாயத்திற்கு உட்பட்ட 10 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. 

பன்னவிலை என்ற பிரதேசத்தில் 19 வருடங்கள் மண்சரிவு அபாயத்திற்கு உட்பட்ட இடமொன்றுக்கு இன்று வரையிலும் எந்தவிதமான பாதுகாப்பான மீள் குடியேற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்வில்லை. 

தேசிய மக்கள் சக்தியின் முதல் ஏற்பாடாக மண்சரிவு அபாயத்திற்கு உட்பட்ட பிரதேசங்களுக்கான  மீள் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வேலைத் திட்டம் முதல் கட்டமாக பதுளையில்  ஆரம்பிக்கப்பட்டு நிறைவடையும் தருணத்தில் இருக்கின்றது என்றார். 

இதன்போது  கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் மண்சரிவு அபாய எச்சரிக்கைக்கு உட்பட்ட 30 குடும்பங்களின் லயின் குடியிருப்புகளையும்  நேரில் சென்று பார்வையிட்டார்.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-14 06:09:04
news-image

20 கோடி ரூபா பெறுமதியான அதிநவீன...

2025-07-14 06:02:05
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28