அமெரிக்காவின் கொலராடோவின் போல்டரில் இஸ்ரேலிய பணயக்கைதிகளிற்கு ஆதரவாக மக்கள் கூடியிருந்த பகுதியில் நபர் ஒருவர் தீ மூட்டி மக்களை எரிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நபர் ஒருவர் எரியக்கூடிய திரவத்தை கொண்ட போத்தல்களை வீசினார் அது தரையில் விழுந்து வெடித்ததும் தீப்பிழப்புகளாக வெடித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்,எவ்பிஐ அதிகாரிகள் உடனடியாக இது பயங்கரவாத செயல் என தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் எகிப்தை சேர்ந்த முகமது சப்ரி சொலைமான் என்ற 45 வயது நபர் எனவும் இவர் 2023 இல் விசா காலாவதியான போதிலும் தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருள் நிரம்பிய போத்தல்களை வீசும்போது சுதந்திரபாலஸ்தீனம் என அவர் கோஷமிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாங்கள் அந்த பகுதிக்கு சென்றபோது பலர் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர், அவர்கள் எரிகாயங்களுடன் காணப்பட்டனர் என போல்டெர் பொலிஸ்; அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM