10 ஆண்டுகளாக பல முக்கிய டென்னிஸ் வீரர்கள் ஆட்ட நிர்ணயம் எனப்படும் சூதாட்டத்தில்ஈடுபட்டார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் உலகதரவரிசைப் பட்டியலில் முதல் 50 இடங்களில் இருந்த டென்னிஸ் வீரர்களில் 16 பேர் கோடிக் கணக்கான ரூபாய் புரண்ட சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், இவர்களில் பலர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் என்றும், பி.பி.சி மற்றும் பஸ்ஃபீட் நியூஸ் என்ற நிறுவனமும் சேர்ந்து தகவல் தெரிவித்துள்ளன.
இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ள இந்த நிறுவனங்கள், இது குறித்து 2007ஆம் ஆண்டு டென்னிஸ் கட்டுப்பாட்டு அமைப்பான ஏ.டி.பி. ரகசியமாக விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளன.
இந்த விசாரணையில் ரஷ்யாஇ இத்தாலி, சிசிலி ஆகிய நாடுகளில் கோடிக்கணக்காண ரூபாய் அளவுக்கு டென்னிஸ் சூதாட்டம் நடைபெற்றது கண்டறியப்பட்டதாகவும் பி.பி.சி. கூறியுள்ளது.
மூன்று விம்பிள்டன் போட்டிகளிலும் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. டென்னிஸ் வீரர்களை அவர்கள் தங்கும் அறைகளில் சந்திக்கும் சூதாட்ட தரகர்கள்இ குறைந்தது 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என்ற தொகையில் இருந்து சூதாட்டம் நடத்தியதாகவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 28 டென்னிஸ் வீரர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின்னும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பி.பி.சி. குற்றம்சாட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM