போதைப்பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை உதித் நிஷாங்க என்ற பெயரில் உள்ள வங்கிக் கணக்கின் ஊடாக பணப்பரிமாற்றங்கள் செய்துக்கொண்ட வழக்கின் இரண்டாவது சந்தேக நபராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “தெமட்டகொடை சமிந்த” என அழைக்கப்படும் சமிந்த ரவி ஜயநாத் என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபர் உதித் நிஷாங்க என்பவர் ஆவார்.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல ரத்நாயக்க முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான பொலிஸார், “தெமட்டகொடை சமிந்த” உதித் நிஷாங்க என்ற பெயரில் உள்ள வங்கிக் கணக்கின் ஊடாக பணப்பரிமாற்றங்கள் செய்துக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் இதனால் இந்த வழக்கின் இரண்டாவது சந்தேக நபராக “தெமட்டகொடை சமிந்த”வின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் இந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM