29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்து முறைப்பாடுகள் பதிவு !

Published By: Digital Desk 3

30 May, 2025 | 02:45 PM
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 29 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தங்களிடம் ஆளனிப் பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறைகள் இருந்த போதிலும் சவால்களுக்கு முகங்கொடுத்து மின்தடைகளை சீர் செய்துவருவதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

இதுவரை 29,015 மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள இலங்கை மின்சாரசபை, மின்தடைகள் ஏதாவது ஏற்பட்டிருநு்தால் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது  CEBCare என்ற கையடக்கத்தொலைபேசி செயலி மூலமாகவோ முறைப்பாடு மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மின்தடைகளை வெகுவிரைவில் சீர்செய்யும் அதேவேளை, பொதுமக்கள் பொறுமைகாத்து தமக்கு ஆதரவு வழங்குமாறு மக்களிடம் இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01
news-image

புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டியை 'தேனிலவு...

2026-07-09 13:01:03
news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39