bestweb

மூன்று கட்சிகளும் இணைந்து பேசுவோம்; சித்தார்த்தனிடம் சுமந்திரன் தெரிவிப்பு

Published By: Vishnu

29 May, 2025 | 06:31 PM
image

(நா.தனுஜா)

அகில இலங்கை தமிழ் காங்கிரஸுடனான இன்றைய சந்திப்பின் பின்னர் தேவையேற்படின் இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாடமுடியும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  

அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் புதன்கிழமை (28) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது வட, கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. 

அதனையடுத்து புதன்கிழமை (28) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து மீண்டும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தமக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு குறித்து சித்தார்த்தன் பிரஸ்தாபித்தார்.

 அதனைத்தொடர்ந்து வியாழக்கிழமை (30)  தமக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் சந்திப்பு நடைபெறவிருப்பதாகவும், அதன் பின்னர் தேவையேற்படின் மூன்று கட்சிகளும் இணைந்து கலந்துரையாடமுடியும் எனவும் சுமந்திரன் கூறியதாக சித்தார்த்தன் கேசரியிடம் தெரிவித்தார்.

அதேவேளை உள்ளூ ராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோருடன் நேற்றைய தினம் தான் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியதாக சுமந்திரன் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சனைக்கு விரைவில்...

2025-07-18 10:07:11
news-image

கடத்தப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்

2025-07-18 09:27:11
news-image

இன்றைய வானிலை 

2025-07-18 06:18:07
news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52