உங்களது கட்சியின் வீட் டினை முதலில் திருத்துங் கள் எனக் கூறிய சிறைச்சாலை மறுசீரமைப்பு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பொருத்து வீட்டுத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுமெனவும் உறுதிபடத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சமர்ப்பித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இத்திட்டத்தை பிரதமரின் ஆலோசனை யின் பிரகாரமே நான் கொண்டு வந்தேன். இந்த வீட்டுத்திட்டம் சம்பந்தமாக இந்த பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக எதிர்ப்புக்களையே வெளிப்படுத்தி வருவது தான் உங்களின் இயல்பாக இருக்கின்றது. இன்று (நேற்று) கூட இந்த ஒத்திவைப்புவேளை பிரேரணையை கொண்டு வந்தவரும் மற்றொருவருமே எதிர்க்கின்றீர்கள். ஆனால் ஏனைய உறுப்பினர்கள் அதனை எதிர்க்கவில்லை.
65 ஆயிரம் வீட்டுத்திட்டம் வந்தது. தற்போது உங்களால் தான் ஆறாயிரமாகியுள்ளது. மக்கள் வீடுகளை எதிர்பார்த்திருக்கின்றார்கள். நீங்கள் எதற்காக எதிர்க்கின்றீர்கள் என்று எனக்குத்தெரியாது. என்ன காரணத்திற்காக எதிர்ப்பு வெளியிடுகின்றீர்கள்? தற் போது சுற்றாடல் தொடர்பான சிந்தனைகளை இங்கு முன்வைத்தார்கள். கல், மண் ஆகிய கனிய வளங்களை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் நிலவுகின்றன. ஊடகங்களுக்கு இந்த விடயங்கள் தெரியாதா?
மாதிரி வீடுகளை பார்த்துவிட்டு சவப்பெட்டி என்கின்றீர்கள். சவப்பெட்டி எவ்வாறிருக்கும் என்று போய் பாருங்கள். நீங்கள் அங்கு சென்று பாருங்கள். மக்கள் வீடுகளுக்காக விண்ணப்பித்திருக்கின்றார்கள். நீங்கள் முதலில் உங்களுடைய கட்சியின் வீட்டை சரி செய்யுங்கள். அதன் பின்னர் மக்க ளுக்கான வீடுகள் தொடர்பில் பார்க்கலாம்.
மக்கள் குடில்களில் வசிக்கின்றார்கள். (புகைப்படத்தினை தூக்கி காட்டியவாறு) ஆனால் நீங்கள் எல்லாம் பெரிய மாளிகை யில் வாழ்கின்றீர்கள். வீட்டுத்திட்டத்தினை எதிர்க்கின்றீர்கள். அதற்கு மாற்றுத்திட்டத்தினை கோரினேன். ஒருவர் கூட எனது அமைச்சுக்கு வருகைதந்து மாற்றுத்திட்டத் தினை வழங்கவில்லை. அதற்கு நிதி இல்லை. இந்த திட்டத்தினை மறுப்பவர் கள் முதலில் மாற்றுத் திட்டத்தை முன்மொழியுங்கள். நீங்கள் ஆடம்பரத்தில் பேசுகின்றீர்கள். உங்களுக்கு மக்களின் எதிர்ப்பு வரும் போது விளங்கும்.
இப்போது நான் தெளிவாக கூறுகின் றேன். பொருத்து வீட்டுத்திட்டத்தினை மக்களுக்காக நிச்சயம் முன்னெடுப்பேன். அதனை வழங்குவேன். நீங்கள் கூறினாலும் அதனை நிறுத்தமாட்டேன். நீங்கள் மக்க ளுக்காக எதனை செய்துள்ளீர்கள்? நீங்கள் நினைத்த மாதிரி செய்ய முடியாது. உங் களது திட்டத்தை கொண்டு வாருங்கள். அதன் பின்னர் பார்க்கலாம். இப்போதைக்கு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவது உறு தியானது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM