(இராஜதுரை ஹஷான்)
புகையிரத திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறையால் புகையிரத சேவையை வினைத்திறனான வகையில் முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.; 430 புகையிரத சாரதிகளுக்கான கேள்வி காணப்படுகின்ற நிலையில் தற்போது 275 சாரதிகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றனர். பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண வேண்டுமாயின் ஆளணி பற்றாக்குறைக்கு உடன் தீர்வுகாண வேண்டும் என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
புகையிரத திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு காணும் பொருட்டு ஆட்சேர்ப்புக்கு அனுமதி வழங்காத காரணத்தால் புகையிரத சேவையை தடையின்றி வினைத்திறனாக முன்னெடுப்பதில் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.
வரையறுக்கப்பட்ட ஆட்சேர்ப்புக்கு கடந்த மார்ச் மாதம் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.தற்போது சேவையில் ஈடுபடும் 275 சாரதிகள் பொதுவான சேவை கட்டமைப்புக்கு மாறாக நாளொன்றுக்கு அதிகளவான புகையிரத பயண சேவையில் ஈடுபட வேண்டிய நிலை காணப்படுகிறது.ஏதேனும் சந்தர்ப்பத்தில் இவர்கள் விடுமுறையில் சென்றால் புகையிரத சேவையை தடையின்றி முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் ஏற்படுகிறது.
20 புகையிரத சாரதிகள் நேற்று முன்தினம் சுகயீன விடுமுறையில் சென்றதால் புகையிரத சேவை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது.இதனால் புகையிரத சேவைகள் பல இரத்துச் செய்யப்பட்டதுடன், தாமதமடைந்தன.இந்த பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காண வேண்டுமாயின் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை போக்குவரத்து அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM