கிராமத்து முறையில் இஞ்சி சட்னி

27 May, 2025 | 05:01 PM
image

கிராமத்து முறையில் இஞ்சி சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.......

தேவையான பொருட்கள் ;

  • எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 
  • இஞ்சி - 1/2 கப் நறுக்கியது 
  • வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது 
  • பச்சை மிளகாய் - 6 
  • காய்ந்த மிளகாய் - 6
  • புளி - 2 துண்டு
  • துருவிய தேங்காய் - 1 மேசைக்கரண்டி
  • கொத்தமல்லி இலை - 1/2 கப்
  • உப்பு - 1 தேக்கரண்டி 
  • தண்ணீர் 
  • வெல்லம் - 1 துண்டு 
  • தாளிப்பு செய்ய
  • எண்ணெய் - 1 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
  • சீரகம் - 1/4 தேக்கரண்டி
  • கடுகு - 1/4 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - 1 
  • பெருங்காய தூள் - 1 சிட்டிகை 
  • கறிவேப்பில்லை 

செய்முறை ;

1. கடாயில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

2. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.  

3. இதில் உப்பு சேர்த்து கிளறி, ஆறவிடவும்.

4. ஆறிய கலவையை, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். 

5. முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். 

6. தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி, இதில் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்க்கவும். 

7. தாளித்த பொருட்களை சட்னி மேல் ஊற்றவும். இஞ்சி சட்னி தயார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right