சிங்கள, பெளத்த தேசியவாதத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியக் கூடாது

Published By: Digital Desk 2

25 May, 2025 | 04:27 PM
image

முள்­ளி­வாய்க்கால் அவலம் அரங்­கேறி 16 வரு­டங்கள் கடந்­துள்ள போதிலும் யுத்­தத்தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வின்­றியும், இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி இன்­றியும் அவ­லத்தை சந்­தித்து வரு­கின்­றனர். இந்த நிலையில் பேர­ழி­வு­களை சந்­தித்த தமிழ் மக்கள், உயி­ரி­ழந்த தமது உற­வு­களை நினைவு கூர்ந்து முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

முள்­ளி­வாய்க்கால் முற்­றத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்­று­கூடி, அழுது புலம்பி, தமது உற­வு­களை உணர்வு எழுச்­சி­யுடன் நினைவு கூர்ந்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் வழ­மை­போன்றே இம்­மு­றையும் தெற்கில் வெற்றி விழா கொண்­டாட்டம் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது.

யுத்­தத்தில் உயிர் நீத்த படை­யி­னரை நினைவு கூரும் வகையில் ஜெய­வர்­த­ன­புர போர் வீரர்கள் நினைவுத் தூபி அமைந்­துள்ள மைதா­னத்தில் 16ஆவது தேசிய போர் வீரர் வெற்றி நினைவு நாள் அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

வடக்கு, கிழக்­கிலும் புலம்­பெ­யர்ந்த தேசங்­க­ளிலும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் இடம்­பெற்­றி­ருந்த நிலையில் தெற்கில் வெற்றி விழா இம்­மு­றையும் கொண்­டா­டப்­பட்­டி­ருக்­கி­றது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்தே இறுதி யுத்­தத்தின் போது படு­கொலை செய்­யப்­பட்ட தமது உற­வு­களை நினைவு கூரு­வ­தற்கு அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் அனு­மதி மறுத்­தி­ருந்­தது. முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலைக் கூட மக்கள் அனுஷ்­டிக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. அந்த வேளையில் தெற்கில் அன்­றைய அர­சாங்­கத்­தினால் தேசிய சுதந்­திர தினத்தை விடவும் கோலா­க­ல­மாக இரா­ணுவ வெற்றி விழா கொண்­டா­டப்­பட்டு வந்­தது.

பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களை முள்­ளி­வாய்க்­காலில் இழந்து தமிழ் மக்கள் தவித்து வந்த வேளையில், அந்த உற­வு­களை நினைவு கூரு­வ­தற்கு அனு­ம­திக்­காத அன்­றைய அர­சாங்கம், வெற்றி விழா வை மாத்­திரம் வெகு­கோ­லா­க­ல­மாக கொண்­டா­டி­யது. இந்த செயற்­பா­டா­னது பெரும் இழப்­பு­களை சந்­தித்த தமிழ் மக்­க­ளுக்கு பெரும் வேத­னையை அழிக்கும் விட­ய­மா­கவே இருந்து வந்­தது.

மஹிந்த ராஜபக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் மாற்­ற­ம­டைந்­ததை அடுத்து நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை மேற்­கொள்­வ­தற்­கான சூழ்­நிலை ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனாலும், படை­யி­னரை நினைவு கூரும் போர்­வையில் வெற்றி விழா கொண்­டாட்­டங்கள் நடத்­தப்­பட்டு வந்­தன.

வடக்கில் தமிழ் மக்கள் உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வேந்தல் செய்த நிலையில் தெற்கில் அர­சாங்கம் வெற்றி விழாவை கொண்­டாடி வந்­தது. இதி­லி­ருந்து வடக்கும் தெற்கும் இரு துரு­வங்­க­ளாக பிரிந்­தி­ருந்­தமை நிரூ­ப­ண­மாகி வந்­தது.

தற்­போது தேசிய மக்கள் சக்­தியின் ஆட்சி இடம்­பெற்று வரும் நிலையில் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்கம் கட்டி எழுப்­பப்­படும், யுத்த  வெற்றி கோஷங்கள் இல்­லாத செயற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­படும், பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் மனங்கள் பாதிக்­கப்­ப­டா­த­வா­றான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்­றெல்லாம் கரு­தப்­பட்­டது.

தேசிய மக்கள் சக்­தி­யா­னது யுத்­தத்தின் கொடூ­ரத்தை நன்கு விளங்­கிய கட்­சி­யாக செயற்­படும் என்ற எதிர்­பார்ப்பு தமிழ் மக்கள் மத்­தியில் மேலோங்­கி­யி­ருந்­தது. தாம் ஆட்­சிக்கு வந்தால் இறுதி யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை வழங்­குவோம், காணா­மல்­போ­னோ­ரது பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும், தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்­றெல்லாம் தேசிய மக்கள் சக்­தி­யினர் வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தனர். அத்­த­கைய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­படும், நாட்டில் இன­வா­தமும் மத­வா­தமும் இல்­லாது ஒழிக்­கப்­படும், இதன்­மூலம் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடியும் என்­றெல்லாம் தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர்.

ஆனால், தேசிய மக்கள் சக்­தியின் ஆட்­சி­யிலும் படை­யி­னரை நினைவு கூர்­வது என்ற போர்­வையில் வெற்றி விழா நிகழ்வு இடம்­பெற்­ற­மை­யா­னது தமிழ் மக்­களைப் பொறுத்­த­ வ­ரையில் பெரும் கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

தெற்கில் இடம்­பெ­ற்ற வெற்றி விழாவில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க கலந்­து­கொள்ள மாட்டார் என்றே எதிர்­பார்க்­கப்­பட்­டது. இந்த விடயம் தொடர்பில் பாது­காப்புச் செய­லாளர் ஓய்வு பெற்ற எயார்வைஸ் மார்ஷல் சம்பத் துய்­ய­கொந்த கடந்த 18ஆம் திகதி பாது­காப்பு அமைச்சில் செய்­தி­யாளர் மாநா­டொன்­றினை நடத்தி அறி­விப்­பினை விடுத்­தி­ருந்தார்.

16ஆவது தேசிய போர் வீரர் நினைவு தினம் கோட்டே ஸ்ரீ ஜெய­வர்­த­ன­பு­ரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவு தூபியில் இடம்­பெறும் என்றும் இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க சார்பில் பிரதிப் பாது­காப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அநுர ஜெய­சே­கர கலந்­து­கொள்வார் எனவும் பாது­காப்பு செய­லாளர் அறி­வித்­தி­ருந்தார்.

இந்த அறி­விப்­பை­ய­டுத்து தேசிய போர் தின நிகழ்வில் ஜனா­தி­பதி பங்­கேற்க மாட்டார் என்ற விடயம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்கு எதி­ர­ணியைச் சேர்ந்த பல்­வேறு கட்­சி­களும் எதிர்ப்­பு­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தலை­மை­யி­லான பொஜன பெர­முன, உதய கம்­மன்­பில தலை­மை­யி­லான பிவி­துரு ஹெல­உ­று­மய, விமல் வீர­வன்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­னணி என்­பன ஜனா­தி­பதி நிகழ்வில் பங்­கேற்­கா­தி­ருப்­பது குறித்து கடும் கண்­ட­னங்­களை தெரி­வித்­தி­ருந்­தன. இத­னை­விட பல்­வேறு சிங்­கள பெளத்த தேசி­ய­வாத அமைப்­பு­களும் தமது அதி­ருப்­தி­களை தெரி­வித்­தி­ருந்­தன. இத்­த­கைய அதி­ருப்­தி­க­ளை­ய­டுத்து ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மையில் தேசிய போர் வீரர் நினைவு தினம் அனுஷ்­டிக்­கப்­படும் என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது.

இதற்­கி­ணங்க தேசிய போர் வீரர் நினைவு தினத்தில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க கலந்­து­கொண்­டி­ருந்தார்.

தேசிய நல்­லி­ணக்கம் மற்றும் ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்பி நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காண தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும், அதற்­கான செயற்­பா­டு­களில் ஈடு­படும் என்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்த நிலையில் தேசிய போர் வீரர் நினைவு தினம் வழமை போன்று இடம்­பெற்­ற­மையும் அதில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க கலந்­து­கொண்டமையும் கடந்த கால அர­சாங்­கங்­களைப் போன்றே தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கமும் செயற்­ப­டு­கின்றது என்ற எண்­ணப்­பாட்டை உரு­வாக்­கி­யி­ருக்­கின்­றது.

இந்த நிகழ்வில் பங்­கேற்ற ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க இங்கு உரை­யாற்­று­கையில்,

“அதி­காரம் மோகம் உடை­ய­வர்கள் வடக்­கிலும் தெற்­கிலும் மீண்டும் இன­வா­தத்தை தூண்ட ஆரம்­பித்­துள்­ளனர். இன­வாதம் தலை­தூக்­கு­வ­தற்கு இனி ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது. காலத்­துக்குக் காலம் அதி­கா­ரத்தை பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவும் அதனை பாது­காத்துக் கொள்­வ­தற்­கா­கவும் தாம் செய்த குற்­றங்­களை மறைப்­ப­தற்­கா­கவும் யுத்தம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது” என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

தெற்கில் சிங்­கள பெளத்த தேசி­ய­வாத சக்­தி­களின் அழுத்தம் அதி­க­ரித்து வரு­கின்­றது. படை­வீரர் நினைவு தின கொண்­டாட்டம் தொடர்பில் அவர்கள் வெளிப்­ப­டுத்­திய கருத்­துகள் மற்றும் ஜனா­தி­ப­திக்கு எதி­ரான அவர்­களின் செயற்­பா­டுகள் என்­பன இதனை உணர்த்­து­வ­தாக உள்­ளன.

சிங்­கள பெளத்த தேசி­ய­வாத சக்­தி­களின் அழுத்­தத்­துக்கு அடி­ப­ணியும் நிலையில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் உள்­ளதோ என்ற சந்­தே­கத்தை தேசிய போர் வீரர் நிகழ்வில் ஜனா­தி­ப­தியின் பங்­கேற்பு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

முதலில் அந்த நிகழ்வில் பங்­கேற்­ப­தில்லை என்ற எண்­ணத்­தி­லி­ருந்த ஜனா­தி­பதி, சிங்­கள பெளத்த தேசி­ய­வாத சக்­தி­களின் எதிர்ப்­பு­களை அடுத்து இந்­நி­கழ்வில் பங்­கேற்­றாரா என்றும் கேள்வி எழுப்­பப்­ப­டு­கின்­றது.

கடந்த கால வர­லாற்றை எடுத்­துக்­கொண்­டாலும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு விட­யத்தில் முயற்­சிகள் எடுக்­கப்­பட்ட போது சிங்கள பெளத்த தேசியவாத சக்திகளின் எதிர்ப்பு காரணமாகவே அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன. அந்த வரலாறு மீண்டும் திரும்புகின்றது என்பதை உணர்த்துவதாகவே சிங்கள பெளத்த தேசியவாத சக்திகளின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன் எனவும் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால், அதற்கு எதிராக பெரும் எதிர்ப்புகள் பெளத்த தேசிய வாதிகளால் கிளப்பப்பட்டது. இதே போன்றதொரு நிலைமை தற்போதும் தோன்றி வருவதாகவே தெரிகின்றது. எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சிங்கள பெளத்த தேசியவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித புதைகுழிகள் தொடர்பில் உரிய விசாரணைகள்...

2025-06-15 17:25:28
news-image

வரலாற்றுத் தவறுகளை நினைவில் கொண்டு எதிர்காலத்தை...

2025-06-08 14:10:51
news-image

ஐ.நா.வின் தவறுக்கு இனியாவது பரிகாரம் காணப்பட...

2025-06-01 11:01:57
news-image

சிங்கள, பெளத்த தேசியவாதத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியக்...

2025-05-25 16:27:45
news-image

முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு இனியாவது நீதி வழங்கவேண்டும்

2025-05-18 12:49:46
news-image

கனடா பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் பிரதிநிதித்துவமும்...

2025-05-04 11:22:25
news-image

இதயசுத்தியுடனான செயற்பாடு விசாரணையில் அவசியம்

2025-04-27 14:11:28
news-image

அரசியல்தீர்வு தொடர்பில் இந்தியாவின் ஆணித்தரமான நிலைப்பாடு...

2025-04-12 16:49:51
news-image

மாகாணசபை தேர்தல் விடயத்தில் தடுமாறத் தொடங்கும்...

2025-04-06 09:36:11
news-image

சர்வதேச தடைகளை தவிர்ப்பதற்கு என்ன வழி?

2025-03-30 12:27:56
news-image

புதிய அரசியலமைப்பு செயற்பாட்டை விரைவுபடுத்த வேண்டியதன்...

2025-03-23 13:13:07
news-image

அரசியலமைப்பு விடயத்தில் காலம் கடத்தும் அரசாங்கத்தின்...

2025-02-09 15:10:34