பொலிஸ் அதிகாரியை தாக்கிய “குற்றவாளி” பூனை கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

Published By: Digital Desk 2

24 May, 2025 | 06:09 PM
image

தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தெருவில் சுற்றித்திரிந்த ஒரு பூனைக்கு உதவ முனைந்த ஒருவரால் தொடங்கிய இந்த சம்பவம், பொலிஸாரின் ‘கைது’ வரை சென்றதோடு, அந்த பூனைக்கு பிணையில் விடுதலையும் கிடைக்க வைத்துள்ளது.

அழகான சாம்பல் நிற அமெரிக்கன் ஷார்ட் ஹேர் இனத்தைச் சேர்ந்த இந்த பூனை, அடையாளம் கூறும்  இளஞ்சிவப்பு நிற காலரில் காணப்பட்டதால், யாரோ இழந்த பூனையாக இருக்கலாம் என எண்ணிய ஒருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

விலங்குகளை நேசிக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்த பூனைக்கு பராமரிப்பு வழங்க முனைந்தபோது, பூனை அவரையும் மற்ற அதிகாரிகளையும் கடித்து தாக்கியுள்ளது.

இதனையடுத்து, இந்த ‘குற்றவாளி’ பூனையை அதிகாரபூர்வமாக கைது செய்துவிட்டு, அதன் பஞ்சு கைகளின் கையொப்பங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.  

பொதுமக்களுக்கு இது பற்றிய தகவல் தெரிய  பொலிஸ் அதிகாரி , தனது சமூக வலைதளத்தில்,

“நான் பசித்ததால் தான் கடித்தேன். யாரையும் வேண்டுமென்றே கடிக்கவில்லை…”

என்று பூனை சொன்னது போல எழுதி,

“இந்த பூனை பொலிஸாரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளது. யாராவது உரிமையாளர் இருந்தால் வந்து பிணையில் விடுவிக்கவும்!” என்று பதிவிட்டுள்ளார்.

 சமூக வலைதளங்களில் இந்த பதிவு வேகமாக பரவ, அதன் உண்மையான உரிமையாளர் பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு, பூனையை பிணையில் மீட்டுச்சென்றுள்ளார்.

அந்த பூனையின் பெயர் ‘நப் தாங்’: பூனையை பிணையில் விடுதலை செய்ததை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பொலிஸார் பூனைக்கு அழகான பூச்சடை காலரை அணிவித்து,  புகைப்படங்களும் எடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

2025-06-12 19:09:30
news-image

மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான...

2025-06-09 14:07:39
news-image

கடலும் காடும் கலந்த “ஆழிவனம்” 

2025-06-09 14:10:39
news-image

ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்...

2025-06-07 12:57:45
news-image

29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்து...

2025-05-30 14:45:05
news-image

அமானுஷ்யங்கள் நிறைந்த ஜப்பானின் “தற்கொலை காடு”

2025-05-28 16:57:48
news-image

நுவரெலியாவில் இயற்கை அழகின் மையப்பகுதியாக திகழும்...

2025-05-27 18:37:56
news-image

பொலிஸ் அதிகாரியை தாக்கிய “குற்றவாளி” பூனை...

2025-05-24 18:09:10
news-image

ஒரே இடத்தில் மூன்று இயற்கை அற்புதங்கள்!...

2025-05-19 17:24:17
news-image

‘வலையில் கண்ட முகம்…’ யார் இந்த...

2025-05-16 16:58:29
news-image

`நாடாகவே' அங்கீகரிக்கப்படாத நாடுகள்

2025-05-16 13:34:10
news-image

தாஜ்மகாலை தன்னந்தனியாகச் சுற்றி பார்க்க முடியுமா?

2025-05-13 10:42:50