(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சபைமுதல்வர் பிமல் ரத்நாயக்கவின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் கடந்த கால சபை முதல்வர்களின் நன்நடத்தைக்கு முற்றிலும் விரோதமானது என்று குறிப்பிட்டு 2025.05.20 ஆம் திகதியன்று சபை முதல்வர் நடந்துக் கொண்ட விதம் குறித்து விசாரணை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளனர்.
சபாநாயகரிடம் வெள்ளிக்கிழமை (23) முன்வைத்துள்ள வலியுறுத்தல் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2025.05.20 ஆம் திகதியன்று நிலையியல் கட்டளை 92(2) ஆ, பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரின் அனுமதியுடன் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் உறுப்பினர் கெளசய்லா ஆரியரத்ன சபாநாயகர் வழங்கிய அனுமதி மற்றும் நிலையியல் கட்டளையை கேள்விக்குட்படுத்தினார்.இச்சந்தர்ப்பத்தில் சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க தகாத வார்த்தைகளை பிரயோகித்து தயாசிறி மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றினார்.இவரது கூற்றுக்கள் நிலையியல் கட்டளை 91( உ) பிரிவுக்கு முரணானது.
10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஆரம்பமான தினத்தில் இருந்து சபை முதல்வரின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் கடந்த கால பாராளுமன்றத்தின் சபைமுதல்வரின் நன்நடத்தைகளுக்கு முற்றிலும் விரோதமானது.ஆகவே 2025.05.20 ஆம் திகதியன்று சபை முதல்வர் சபையில் நடந்துக் கொண்ட விதம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுங்கள்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM