வெள்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க இன்று (23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திம்பிரிகஸ்யாயவில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு - வெள்ளவத்தை ஹவலொக் சிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர குடியிருப்புத் தொகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி தொடர்பில் 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு - வெள்ளவத்தை ஹவலொக் சிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர குடியிருப்புத் தொகுதியில் பெண்ணொருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM