இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் 300 படகுகள் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன - வர்ணகுலசிங்கம்

21 May, 2025 | 04:50 PM
image

அனுமதிக்கு மேலாக 300 படகுகளும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன என வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். 

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (21) வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் கருத்துத் தெரிவிக்கும்போது,

யாழ். மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளில் கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது என நாம் குரல் குடுத்து வரும் நிலையில் 310 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடலட்டை பிடிப்பதற்காக 310 படகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளன. 

ஊழலற்ற கட்சி, அரசு என கூறிக்கொண்டு வந்த NPP 310 படகுகளுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், எப்படி 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளன.

அனுமதிக்கு மேலாக 300 படகுகளும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன.

தடை செய்யப்பட்டுள்ள தொழில்களுக்கு இலஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளிக்கும் அமைச்சு. கடல், மீன்பிடி பற்றி தெரியாத ஒருவர் அமைச்சராக இருந்துகொண்டு கடற்றொழில் பற்றி பேசுவது கிடையாது.

பாராளுமன்றில் நேற்று விவசாயம், குளங்கள், வீதிகள் பற்றி பேசும் அமைச்சர் கடற்றொழில் பற்றி பேசவே இல்லை. 

உள்ளூராட்சி சபைகளை ஆட்சி செய்வதில் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க முன்வர வேண்டும். இனிமேலும் ஒன்று சேராமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாள முடியாது. இதனை தமிழ்க் கட்சிகள் உணர்ந்து மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் எதிர்காலத்தில் மக்கள் இவ்வாறான கட்சிகளை நிராகரிக்க வேண்டும்.

தனித்து நிற்கும் கட்சிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ வெளிநாட்டில் இருந்து எமது உறவுகள் பணம் அனுப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு பணம் அனுப்புவதை நிறுத்தினாலே இங்கு உள்ளவர்களை வழிக்கு கொண்டுவர முடியும்.

அரசு காணி சவீகரிப்பு தொடர்பில் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது. 5985 ஏக்கர் காணிகளில் 3500 ஏக்கர் வரையான காணி வடமராட்சி கிழக்கில் காணப்படுகிறது. இக்காணிகளில் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து, கடற்றொழில் மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பூர்வீகக் காணிகள் இவை.

யுத்தம் மற்றும் வேறு காரணங்களால் மக்கள் குறத்த பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். பலர் வேறு பகுதிகளில் வசித்து வரும் நிலையில் இக்காணிகளை அரசுடமையாக்க அரசு முனைவதை நாம் எதிர்க்கிறோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில்...

2025-06-19 16:46:18
news-image

அமெரிக்க வீசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

2025-06-19 17:32:57
news-image

எப்பாமுல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய...

2025-06-19 15:48:22
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-06-19 16:13:46
news-image

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலையால் நமது...

2025-06-19 16:23:28