கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR ராஜன் கிரிக்கெட் போட்டியின் 20வது பதிப்பில் வெற்றி பெற்றது

20 May, 2025 | 07:14 PM
image

சமூக உறவுகளை மற்றும் விளையாட்டு மனப்பாங்கை கொண்டாடும் ஒரு முக்கியமான நிகழ்வான 20வது TRR ராஜன் ரோட்டரி கிரிக்கெட் போட்டியில் கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் வெற்றிபெற்றது. 

இந்த போட்டி அண்மையில் நிட்டவெலவில் நடைபெற்றது.

 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இந்த போட்டி ரோட்டரி நாட்காட்டியின் முக்கிய நிகழ்வாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டிக்கு ‘சூரியா’ என்ற நம்பகமான வீட்டு பயன்பாட்டு பிராண்டை தொடக்கியவர், மறைந்த T.R.R. ராஜன் ஆவார். இவர் ரோட்டரி கிளப் ஒஃப் கண்டியின் 51வது தலைவராக இருந்ததோடு ஒரு சிறந்த மனிதநேயவாதியாகவும் திகழ்ந்துள்ளார். 

வணிகம் மற்றும் விளையாட்டுத்துறைகளில் அவரது பங்களிப்புகள் அவரது மரபைத் தொடரும் தலைமுறைகளுக்கு மெய்ப்பித்தலாக இருக்கின்றன. 

ரோட்டரி கவர்னர் சுஷேன ரணதுங்க இந்த போட்டியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தபோது,

“இந்த நிகழ்வு எங்கள் ரோட்டரி நாட்காட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒன்றாகும்.

இது ரோட்டரியன்கள், ரோட்டராக்டர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களையும் நண்பர்களையும் ஒற்றுமைக்கான ஒரு நாளுக்காக ஒன்றிணைக்கிறது” என்று கூறினார்.

இதேவேளை T.R.R. ராஜனின் மகளும் ரோட்டரி இலங்கையின் முதல் பெண் கவர்னருமான கௌரி ராஜன், தனது தந்தை விளையாட்டு ஊக்குவிப்பில் காட்டிய அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்தார். 

“என் அப்பா இந்த போட்டியின் தொடர்ச்சியான வெற்றியை பார்த்திருந்தால் மகிழ்ந்திருப்பார். அவர் 1992ஆம் ஆண்டில் கண்டி விளையாட்டு கிளப்பின் ரக்பி அணியை ஆதரிப்பதன் மூலம் உள்ளூர் விளையாட்டுக்கு ஆதரவு அளித்த முதல் நபராக இருந்தார். அந்த அணி பின்னர் கிளிஃபோர்ட் கப்பை வென்றது” என்றார்.

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப்பின் வெற்றியடைந்த கெப்டன், “இன்றைய விரைவான வாழ்க்கையில் ஒரு குடும்பமாக ரோட்டரியன்கள் ஒன்றுகூடி, மகிழ்ச்சி மற்றும் நகைச்சுவையுடன் ஒரு நாளைக் கழிப்பது நம்மை நீண்ட காலம் நினைவுகூரச் செய்யும் நினைவுகளை உருவாக்குகிறது” என கூறினார்.

TRR ராஜன் கிரிக்கெட் போட்டி, போட்டித் திறனுக்கு ஒரு மேடையாக மட்டுமல்லாமல், ரோட்டரி சமூகத்துக்குள் உறவுகளை வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் இருந்து வருகிறது. இது ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் ஊக்குவித்து, சிறந்த நாளுக்காக முன்னேற வழிகாட்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29
news-image

இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிலையான சமாதானத்தை...

2025-06-15 20:08:40
news-image

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு

2025-06-15 17:43:24
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய...

2025-06-14 11:28:41
news-image

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில்...

2025-06-13 20:55:14
news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43
news-image

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் பொசன் போயாவை...

2025-06-11 19:39:19
news-image

நேஷன்ஸ் டிரஸ்ட் வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப்...

2025-06-10 14:53:12
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2025-06-09 17:07:35
news-image

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ வற்றாப்பளை...

2025-06-09 15:28:38