அரசாங்கத்துக்கு பதிலளிக்க பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வர வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

20 May, 2025 | 02:02 PM
image

(எம்.மனோசித்ரா)

பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருப்பதாகவும், தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், நாட்டுக்கு வர மாட்டார் என்றும் அரசாங்கம் காலத்துக்கும் கூறிக் கொண்டிருக்கிறது. எனவே அரசாங்கத்துக்கு பதிலளிப்பதற்கு அவர் நாட்டுக்கு வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை (19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பசில் ராஜபக்ஷவுக்கு நாட்டுக்கு வரவுவதற்கு உரிமை இருக்கிறது. அவர் வரவில்லை எனில் தலைமறைவாக உள்ளதாகக் கூறுகின்றனர். 

வந்தால் நாமலுக்கு உதவுவதற்காக வருவதாகக் கூறுகின்றனர். இவற்றில் எது சிறந்தது என்பதே தெரிந்து கொள்ள வேண்டிய காரணியாகும். அவர் நாட்டுக்கு வர வேண்டும். அரசாங்கத்தால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

சவால்களை எதிர்கொள்வதோடு அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும். அவர் தொடர்பான பிரச்சினைகளுக்கு நாமல் ராஜபக்ஷவுக்கோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவுக்கோ பதிலளிக்க முடியாது. 

தன் மீதான குற்றச்சாட்டுகளை நேரடியாக எதிர்கொண்டு அவற்றுக்கு பதிலளித்து தான் குற்றமற்றவர் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும்.

அப்போது தான் இந்த அரசாங்கத்துக்கு யார் சரி, யார் தவறு என்பது புரியும். பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருப்பதாகவும், தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், நாட்டுக்கு வர மாட்டார் என்றும் அரசாங்கம் காலத்துக்கும் கூறிக் கொண்டிருக்கும். அவர் நாட்டுக்கு வந்து விட்டரெனில் அந்த பேச்சுக்களும் முடிந்து விடும்.

நாமல் ராஜபக்ஷவுக்கு உதவுவதற்கு பசில் நாட்டுக்கு வர வேண்டிய தேவை இல்லை. அமெரிக்காவிலிருந்து கூட உதவ முடியும். 

எவ்வாறிருப்பினும் இந்த அரசாங்கத்துக்கு பதிலளிப்பதற்கு அவர் நாட்டுக்கு வர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸில் இருந்து யாழ் வந்த முதியவர்...

2026-05-17 14:41:05
news-image

வனவாசல ரயில் விபத்து: 3,000 ரூபாவிற்கு...

2026-05-17 14:26:44
news-image

பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றல்!

2026-05-17 14:25:56
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-05-17 14:14:42
news-image

கார் - மோட்டார் சைக்கிள் மோதி...

2026-05-17 14:11:04
news-image

நீரில் மூழ்கி நபரொருவர் பலி!

2026-05-17 14:10:33
news-image

அடையாளம் தெரியாத சடலம் கண்டுப்பிடிப்பு!

2026-05-17 13:58:51
news-image

கல்கிஸ்சை பகுதியில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான...

2026-05-17 13:22:18
news-image

நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பொலிஸ் பதவி...

2026-05-17 12:53:28
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா 2026:...

2026-05-17 12:47:10
news-image

இளம் வயதிலேயே சிறுமிகள் கப்பிணிகளாக மாறும்...

2026-05-17 12:35:04
news-image

சாய்ந்தமருது நகர சபையை ஸ்தாபிக்கும் செயற்பாடுகள்...

2026-05-17 12:30:15