இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகவும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய "சொல்லும் செய்திகள்" மற்றும் "தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு" என்ற தலைப்புகளில் உருவான இரண்டு நூல்களும் நேற்று திங்கட்கிழமை (19) பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்டன.
இந்த இரண்டு நூல்களையும் மதியழகனின் சகோதரி ஆனந்த லட்சுமி தர்மசீலன் பிரதமரிடம் வழங்கினார்.
தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடகத் துறை மாணவர்களால் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் இந்த நூல்களை, பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் 1,000 பாடசாலை நூலகங்களுக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மதியழகனின் சகோதரி தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் வி.என்.ஆனந்த லட்சுமியின் மகன் ஆதித்யன் மற்றும் அவரது மகள் திரினேத்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM