அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் விரைவில் குணமடையவேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (மே 18 2025) தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (மே 16 2025) அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் புற்றுநோய் செல்கள் எலும்புக்கு பரவியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ஜோ பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புரோஸ்டேட் புற்றுநோய்களுக்கு க்ளீசன் மதிப்பெண் எனப்படும் ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. இது சாதாரண செல்களுடன் ஒப்பிடும்போது புற்றுநோய் செல்கள் எவ்வாறு தோற்றமளிக்கின்றன என்பதை 1 முதல் 10 வரை அளவிடும். இதில் ஜோ பைடனின் மதிப்பெண் 9 என்றும் இது அவரது புற்றுநோய் தீவிரமாக இருப்பதைக் குறிக்கிறது என்றும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் எலும்புகளுக்கு பரவுகிறது என்றும் இதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் என்றும் கூறப்படுகிறது.
“இது நோயின் தீவிரமான வடிவத்தைக் குறிக்கும் அதே வேளையில் புற்றுநோய் ஹார்மோன் உணர்திறன் கொண்டதாகத் தோன்றுகிறது. இது பயனுள்ள சிகிச்சைமுறைக்கு அனுமதிக்கிறது. ஜோ பைடனும் அவரது குடும்பத்தினரும் அவரது மருத்துவர்களுடன் சிகிச்சை விருப்பங்களை மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.” என்று பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜோ பைடன் விரைவில் குணமடைய பல அரசியல் தலைவர்கள் தங்கள் ஆறுதல்களைத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில் "ஜோ பைடனின் மருத்துவ அறிக்கை தொடர்பாக சமீபத்தில் தகவல் அறிந்து நானும் மெலனியாவும் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். ஜில் பைடன் மற்றும் குடும்பத்தினருக்கு நாங்கள் எங்கள் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஜோ விரைவில் குணமடைய விரும்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
முன்னாள் துணை ஜனாதிபதி ர் கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள செய்தியில் “பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதை அறிந்து நானும் எனது கணவரும் மிகவும் வருத்தமடைந்தோம். இந்த நேரத்தில் அவருக்காகவும் அவரது முழு குடும்பத்திற்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். ஜோ ஒரு போராளி. அவர் இந்த சவாலை நம்பிக்கையுடன் எதிர்கொள்வார் என்பது எனக்குத் தெரியும். அவர் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM