(எம்.ஆர்.எம்.வசீம்)
எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைக்க இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் தலதா அத்துகோரள மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோர் இணைந்து திங்கட்கிழமை (19) வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கிய உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் திங்கட்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அதன்பிரகாரம் இது தொடர்பான கொள்கை ரீதியிலான விடயங்கள் தொடர்பில் விசேடமாக கலந்துரையடப்பட்டது. அத்துடன், எதிர்க்கட்சியின் ஏனைய தரப்பினருடன் இணைந்து இந்த சபைகளில் ஆட்சியமைப்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம் என இரு தரப்பு சார்பாகவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை அந்த சபையின் மேயர் அல்லது தலைவராக நியமித்துக்கொண்டு, ஆட்சியமைப்பது தொடர்பான கலந்துரையாடல் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் பிரகாரம் திங்கட்கிழமை எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கட்சியின் செயலாளர் தலதா அத்துகோரள, பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன, தவிசாளர் வஜிர அபேவர்த்தன மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதிச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், கட்சியின் சிரேஷ் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் கலந்துகொண்டிந்தனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM