நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு எச்சரிக்கை நாளை (19) காலை 10:00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் (NBRO) தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்படும், முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
கொழும்பு: சீதாவாக்கை பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
காலி: எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
களுத்துறை: பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் பாலிந்தநுவர
கண்டி: பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
கேகாலை: புலத்கோஹுபிட்டிய, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் வரக்காபொல பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
இரத்தினபுரி: எஹெலியகொட, கிரி எல்ல மற்றும் குருவிட்ட பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM