கொழும்பில் நடைபெற்ற 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !

Published By: Digital Desk 3

18 May, 2025 | 03:38 PM
image

2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இம்முறையும் 16 ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலை கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த வெள்ளவத்தை அலெக்ஸாண்டிரா வீதி கடற்கரை பகுதியில் இன்றைய தினம் காலை முதல் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை கடந்த சில வருடங்கள் போன்று இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளை குழுப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் இதனையும் மீறி பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் உணர்வுபூர்வமாக பங்கெடுத்தனர்.

அரசியல்வாதிகள் சிவில் சமூகத்தினர் பொதுமக்கள் என சமூகத்தின் பல தரப்பட்டவர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் செயற்படும் சுதந்திர பாலஸ்தீன அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டுநிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான நினைவேந்தல் நினைவில்  கவிதை வாசித்தல், உரைகள் போன்றவையும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியில் நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களிற்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

 (படப்பிடிப்பு – ஜே. சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின்...

2026-06-13 17:21:32
news-image

மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்...

2026-06-13 17:20:23
news-image

ஜே.ஆரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-13 17:03:31
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும்...

2026-06-13 10:52:00
news-image

பேக்கரித்துறைக்கு இயற்கை விவசாய பொருட்களை பயன்படுத்துவது...

2026-06-13 16:34:27
news-image

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத்...

2026-06-13 15:57:28
news-image

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில்...

2026-06-13 15:22:47
news-image

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க...

2026-06-13 13:56:01
news-image

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு;...

2026-06-13 14:47:01
news-image

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி...

2026-06-13 13:50:38
news-image

நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கு ‘சிவப்பு’...

2026-06-13 13:58:45
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்:...

2026-06-13 13:55:50